tamilnadu

img

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை அமல்படுத்த சிஐடியு எதிர்ப்பு

கடலூர், ஜூலை 5- இந்திய தொழிற்சங்க மையத்தின் (சிஐடியு) கடலூர் மாவட்ட 12வது மாநாடு வெள்ளியன்று (ஜூலை 5)  துவங்கியது. இரண்டு நாட்கள் நடை பெறும் இம்மாநாட்டில் ஹைட்ரோ  கார்பன் திட்டத்தை அமல்படுத்தக் கூடாது என தீர்மானம் நிறை வேற்றப்பட்டுள்ளது. கடலூரில் எஸ்.கார்த்திகேயன் நினைவரங்கத்தில் தொடங்கிய மாநாட்டிற்கு மாவட்டத் தலைவர் ஜி.பாஸ்கரன் தலைமை தாங்கினார்.  இஐடி பாரி சங்கச் செயலாளர் ஆர்.வி. சுப்பிரமணியன் கொடியேற்றினார். மாநிலக் குழு உறுப்பினர் ஏ.வேல்முரு கன் அஞ்சலி தீர்மானத்தை முன்  மொழிந்தார். வரவேற்புக் குழு செய லாளர் டி.பழனிவேல் வரவேற்றார். மாநில உதவிப் பொதுச் செயலாளர் வி.குமார் மாநாட்டை துவக்கி வைத்து பேசினார்.  வேலை அறிக்கையை செயலா ளர் பி.கருப்பையனும், வரவு செலவு  அறிக்கையை பொருளாளர் ஜி.குப்பு சாமியும் சமர்ப்பித்தனர். மாநில துணைத் தலைவர் கே.விஜயன், விவசாய சங்க மாவட்டச் செயலாளர்  ஜி.மாதவன், விவசாய தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் எஸ்.பிரகாஷ், ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.

டெல்டா பகுதியில் உள்ள பல்லா யிரக்கணக்கான விளை நிலங்களும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை அமல்படுத்தக் கூடாது, மத்திய அரசு மேற்கொள்ளும் ஆய்வு நடவடிக்கைகளுக்கு தமிழக அரசு அனுமதி அளிக்கக் கூடாது, முறைசாரா தொழிலாளர்களுக்கு தேசிய நிதியத்திலிருந்து 3 விழுக் காடு நிதியை ஒதுக்கீடு செய்ய வேண்டும், நலவாரியத்தில் பதிவு  செய்துள்ள முறைசாரா தொழிலா ளர்களுக்கு ஓய்வூதியம் ரூ.3 ஆயிரம் வழங்க வேண்டும், பெண் தொழிலாளர்களுக்கு 50 வயதில் ஓய்வூதியம் வழங்க வேண்டும், எங்கு விபத்து ஏற்பட்டாலும் மர ணத்திற்கு ஐந்து லட்சமும், இயற்கை மரணத்திற்கு ஒரு லட்ச ரூபாயும் வழங்க வேண்டும். பிரசவத்திற்கு 12 ஆயிரமும், கருச்சிதைவிற்கு 6 ஆயிரம் ரூபாயும், திருமண உதவித்  தொகை 25,000 ரூபாயும் வழங்க வேண்டும், கல்வி உதவித் தொகையை இரட்டிப்பாக வழங்க  வேண்டும். முறைசாரா தொழிலாளர்  கள் நலவாரியத்தில் பதிவு செய்வ தற்கு விஏஓ சரிபார்ப்பு முறையை ரத்து செய்ய வேண்டும், கடலூர் மாவட்டத்தில் 8 ஆயிரத்திற்கும் மேற் பட்ட தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய பணப்பயன்களை வழங்க  வேண்டும். 

என்எல்சி நிறுவனத்தில் பணிபுரி யும் 13,000 ஒப்பந்த தொழிலாளர் களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மா னங்கள் நிறைவேற்றப்பட்டன. மாநில உதவி பொதுச் செயலா ளர் வி.குமார் மாநாட்டை துவக்கி வைத்து பேசியதாவது, இந்தியாவில் நல்ல லாபம் ஈட்டக்கூடிய பொதுத் துறை நிறுவனங்களை மத்திய அரசு திட்டமிட்டு தனியாரிடம் தாரைவார்க்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. தனியார்மயத்திற்கு எதி ராகவும், தொழிலாளர்களின் வாழ்வா தாரத்தை பாதுகாக்கவும், வேலை  பாதுகாப்புக்காகவும், மானியத்தை குறைப்பதை எதிர்த்தும், குறைந்த பட்ச ஊதியம், மருத்துவம், ஓய்வூதி யம் உள்ளிட்ட கோரிக்கைகளுக்காக உலகம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. 1948ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட இஎஸ்ஐ திட்டத்தால் தொழிலாளர்க ளும், அவர்களின் குடும்பத்தினரும் பயன்பெற்று வந்தனர். ஆனால் 2017ஆம் ஆண்டு இந்த திட்டத்திற்கு செலுத்த வேண்டிய 6.5 விழுக்காடு பணத்தை 4 விழுக்காடாக மத்திய அரசு குறைத்தது. இதனால் 21 ஆயி ரம் கோடி ரூபாயில் இருந்து 13 ஆயி ரம் கோடி ரூபாயாக சுருங்கிவிட்டது. இதனால் தொழிலாளர்களுக்கும் அவர்களின் குடும்பத்திற்கும் முழு மையான மருத்துவம் கிடைப்பதே கேள்விக்குறியாகி உள்ளது. இப்படி பலவிதமான தாக்குதல்கள் அரசு தரப்பிலிருந்து தொழிலாளர்கள் மீது தொடுக்கப்படுகிறது. ஏற்கனவே இருந்த சூழலை தற்காத்துக் கொள் ளும் போராட்டம்தான் தற்போது நடைபெற்று வருகிறது. இனிமேல் தொழிலாளி வர்க்கம் திருப்பித் தாக்கும் போராட்டத்திற்கு தயாராக இருக்க வேண்டும் என்றார்.