சுங்கச்சாவடி கட்டணம் நாளை (ஏப்.1) முதல் உயர்த்தப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று தமிழகம் முழுவதும் சிஐடியு சார்பில் பேராட்டம் நடத்தப்பட்டது.
நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளின் கட்டணத்தை 5 முதல் 10 சதவீதம் வரை உயர்த்த தேசிய நெடுஞ்சாலைகள் திட்ட ஆணையம் பரிந்துரை செய்துள்ளது. இதனால், நாளை முதல் சுங்கச் சாவடிகளில் கட்டண உயர்வு அமலுக்கு வர உள்ளது. இந்த கட்டண உயர்வால் லாரி வாடகை மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயரும் அபாயம் உள்ளது. அத்துடன், தனியார் பேருந்துகளின் கட்டணமும் உயர்த்தப்பட வாய்ப்பு உள்ளது.
இந்த நிலையில், இன்று தமிழகம் முழுவதும் சுங்கச்சாவடி கட்டணம் உயர்வை கண்டித்து சிஐடியு சார்பில் பேராட்டம் நடத்தப்பட்டது. தமிழகம் முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகள் முன்பு மோட்டார் வாகன தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.