tamilnadu

தொழிலாளர்துறை ஆணையருடன் சிஐடியு தலைவர்கள் சந்திப்பு

 சென்னை, மே 9 - முறைசாரா தொழிலாளர்ளுக்கு அரசு அறிவித்த நிவார ணத்தொகையை விரைந்து வழங்க வலியறுத்தி தொழிலாளர்  நல ஆணையரை சந்தித்து சிஐடியு தலைவர்கள் வலி யுறுத்தினர். முறைசாரா, வீட்டுவேலை, தையல், சலவை, தெரு வோர வியாபாரிகள் உள்ளிட்ட தொழிலாளர்களுக்கு கொரோனா ஊரடங்கு நிவாரண நிதி வழங்கப்படாமல் உள்ளது. நிவாரணத்தை விரைந்து வழங்கிட வலியுறுத்தி தொழிலாளர் நலத்துறை இணை ஆணையர் மாதவனை, சிஐடியு தென்சென்னை மாவட்டத் தலைவர் இ.பொன்முடி, செயலாளர் பா.பாலகிருஷ்ணன், முறைசாரா சங்க மாவட்டச்  செயலாளர் வ.செந்தில்குமார் ஆகியோர் சந்தித்து பேசினர்.  நிவாரணத்தை விரைந்து வழங்க ஆவண செய்வதாக இணைஆணையர் உறுதியளித்தார்