tamilnadu

தமிழக வாக்காளர்களுக்கு வைகோ நன்றி!

சென்னை, மே 23-மக்களவைத் தேர்தலில், திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு மகத்தான வெற்றியை அளித்ததன் மூலம், தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, டாக்டர் கலைஞர் ஆகியோரின் கொள்கை வழியில் நிற்கின்ற திராவிட இயக்க பூமி தமிழ்நாடு என்பதை, இந்திய அரசியல் அரங்கத்திற்கு தமிழக மக்கள் பறைசாற்றி இருக்கின்றார்கள். தமிழ் நாட்டில் மதவாத சக்திகளுக்கு இடம் இல்லை என் பதை தெளிவுபடுத்தி இருக்கின்றார்கள்.கடந்த ஐந்து ஆண்டுக் கால மத்திய பாஜக அரசு, தமிழகத்தின் உயிராதாரமான காவிரி நீர் பிரச்சனை முதல் அனைத்திலும் தமிழ் நாட்டை வஞ்சித்து வந்ததையும், திமுக அரசு, அவர்களுக்கு அடிமைச் சேவகம் செய்ததையும் பொறுத்துக் கொள்ள முடியாமல், தமிழக மக்கள் கோபாவேச உணர்வுடன் பொங்கி எழுந்துள்ளனர். பல்லாயிரம் கோடி பணத்தைச் செலவழித்தபோதிலும் மக்களவைத் தேர்தலில் ஒட்டுமொத்தமாகத் தமிழகம் முழுமையும் படுதோல்வி அடைந்துள்ள அதிமுக அரசு, மக்கள் நம்பிக்கையை அடியோடு இழந்து விட்டது.தமிழ்நாடு சட்டசபைக்கு நடைபெற்ற இடைத்தேர்தல்களில், அதிகாரத்தின் துணைக் கொண்டு நடத்திய அத்துமீறல்களால் சில தொகுதிகளில் வெற்றி பெற்று இருந்தாலும், திமுக அரசுக்கு, அதிகாரப் பொறுப்பில் நீடிக்க எந்த உரிமையும் இல்லை. எனவே, எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு உடனே பதவி விலக வேண்டும். வடபுலத்தில், மதவாத சனாதன சக்திகள் மக்களைப் பிளவுபடுத்தும் முயற்சியில் வெற்றி கண்டதாலும், பாஜக வேட்பாளர்களை எதிர்த்து எதிர்க்கட்சிகளின் தரப்பில் ஓரணியில் நின்று தேர்தலை சந்திக்கும் சூழல் உருவாகாமல் போனதாலும், வாக்குகள் சிதறி பாஜக கூட்டணிக்குச் சாதகமான முடிவுகள் வந்துள்ளன. தமிழகத்தில், மதச்சார் பற்ற முற்போக்கு கூட்டணியைக் கட்டி அமைத்து, தேர்தல் களத்தில் மாபெரும் வெற்றியை ஈட்டிய தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களின் தலைமைக்கு தமிழக மக்கள் அங்கீகாரம் வழங்கியிருக்கின்றனர்.தமிழக சட்டப்பேரவைக்கு எப்போது தேர்தல் நடந்தாலும், திமுக கூட்டணி 200 இடங்களுக்கு மேல் வெற்றி பெறும் என்ற நம்பிக் கையைத் தந்து இருக்கின் றார்கள். மதச்சார்பற்ற முற் போக்கு கூட்டணிக்கு வாக்கு அளித்து, மாபெரும் வெற்றியைத் தந்த தமிழக மக்களுக்கு, நன்றி மலர்களைக் காணிக்கை ஆக்குகின்றேன் என்று அறிக்கை ஒன்றில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்திருக்கிறார்.

;