சென்னை, நவ. 12 - குடிசைமாற்று வாரிய குடியிருப்புகளை முழு மானியத்தில் புதுப்பித்துக் கட்டித்தர தேவையான நட வடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழச்சி தங்கபாண்டி யன் எம்.பி.,யிடம் மார்க்சி ஸ்ட் கட்சித் தலைவர்கள் வலியுறுத்தினர். இது தொடர்பாக கட்சியின் தென்சென்னை மாவட்டச் செயற்குழு உறுப்பினர் எஸ்.குமார், மயி லாப்பூர் பகுதிச் செயலாளர் ஐ.ஆர்.ரவி உள்ளிட்டோர் செவ்வாயன்று (நவ.12) தமிழச்சி தங்கபாண்டியனி டம் அளித்துள்ள மனுவின் சுருக்கம் வருமாறு: ஜவஹர்லால் நேரு நகர்ப்புர புணரமைப்புத் திட்டம், அனைவருக்கும் வீடுதிட்டம், சிதலமடைந்த குடியிருப்புகளை மீண்டும் கட்டுதல் திட்டம் போன்ற வற்றின் கீழ் மயிலாப்பூர் தொகுதியில் குடிசை மாற்று வாரிய வீடு கட்டப்படு கின்றன. வள்ளீஸ்வரன் தோட்டம், முத்தையாபுரம், விசாலாட்சி தோட்டம், பல்லாக்குமாநகர், கபாலி தோட்டம், ஆண்டிய மான்ய தோட்டம், குப்பைமேடு வன்னியம்பதி, ஆலயம்மன் கோவில், நாட்டான் தோட்டம், குயில் தோட்டம், பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம் குடியிருப்பு பகுதிகளில் பூர்வாங்க பணிகள் தொடங்கி, சில இடங்களில் வீடு கட்டும் பணி நடந்து வருகிறது. இந்த வீடுகளுக்கான கட்டுமான செலவில் மத்திய, மாநில அரசுகள் தலா 40 விழுக்காடு தொகையை ஏற்றுக் கொள்கின்றன. பயனாளிகள் 20 விழுக்காடு தொகையை செலுத்த வேண்டும். வாரிய வீடுகளில் உள்ள வர்களில் பெரும்பான்மை யோர் முறைசாரா தொழி லாளர்கள். இவர்களது வேலை குடியிருப்பை சுற்றியே உள்ளது. அதற்கேற்ப அருகாமையி லேயேதான் வாடகை வீடுகளை தேட வேண்டும். பல நூற்றுக்கணக்கான குடும்பங்கள் ஒரே நேரத்தில் வீடு தேடும்போது, வீடு கிடைப்பதில்லை; வாடகை யும் உயர்கிறது. புதிய வீடுகள் கட்டி முடிக்க 2 முதல் 3 ஆண்டுகள் ஆகும். அது வரை வாடகை வீட்டில்தான் தங்க வேண்டும். ஒரே நேரத்தில் வாடகையும் கொடுத்துக் கொண்டு, புதிய வீட்டிற்கான தொகையும் செலுத்த முடியாது. எனவே, 40 ஆண்டு களுக்கு அதிகமாக வாரிய வீட்டில் வசிப்போருக்கு முழு மானியத்தில் வீடு கட்டித்தர வேண்டும். தற்போது குடியிருக்கும் மக்கள் சந்திக்கக் கூடிய தண்ணீர் மற்றும் அடிப்படை வசதி களை கணக்கில் கொண்டு புதிய கட்டிடத்தின் மாடி எண்ணிக்கையை தீர்மானிக்க வேண்டும். வாரிய குடியிருப்புக்கு அருகே காலியான இடம் இருப்பின் அங்கு தற்காலிக குடியிருப்புகள் கட்டித்தர வேண்டும். புதுப்பித்து வீடு கட்டும்போது அந்தப் குடியிருப்பில் பூங்கா, சமூக நலக் கூடம், விளையாட்டுத் திடல், நூலகம், படிப்பகம், உடற்பயிற்சி கூடம், நியாய விலைக் கடை உள்ளிட்ட கட்டமைப்புகளை ஏற்படுத்த வேண்டும், குடியிருப்புக ளில் பராமரிப்பு செலவுகளை வாரியத்தின் மேற்பார்வை யில் நடைபெற வேண்டும். புதிய குடியிருப்பு கட்டிய பிறகும் கழிவுநீர், குப்பை அகற்றுதல், பராமரித்தல், குடிநீர் வழங்கல் உள்ளிட்ட அனைத்து பணிகளையும் வாரியமே ஏற்று செய்ய வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்நிகழ்வின்போது பகுதிக்குழு உறுப்பினர்கள் ஜெயச்சந்திரன், எம்.குமார், ஜோசப், கிளைச் செயலாளர் மாரிமுத்து, வாலிபர் சங்க பகுதிச் செயலாளர் கே. மகேஷ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.