tamilnadu

img

தனியார் பள்ளி பேருந்து மீது நடந்த தாக்குதலில் குழந்தைகள் காயம்

தனியார் பள்ளி பேருந்து மீது  நடந்த தாக்குதலில் குழந்தைகள் காயம்

கோவில் திருவிழாவில் வன்முறை 

கிருஷ்ணகிரி, ஜூன் 12- போச்சம்பள்ளி வட்டம், கல்லாவி பகுதி ரெட்டி பட்டியில் நடை பெற்ற கோவில் திருவிழாவின்  போது தனியார் பள்ளி பேருந்து மீது வன்முறை தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 6 பள்ளிக் குழந்தைகள் காயமடைந்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி வட்டத்தில் உள்ள கல்லாவி பகுதி ரெட்டி பெட்டியில், இரண்டு நாட்களுக்கு முன்பு கோவில் திருவிழா நடை பெற்றது. அப்போது, அந்த வழியே சென்ற தனியார் பள்ளி பேருந்து மீது  இளைஞர்கள் சிலர் போதையில் வெடிகள், பட்டாசுகள் மற்றும் கற்களை வீசியதாக கூறப்படுகிறது. பேருந்தின் உள்ளே பட்டாசுகள் வெடித்ததால் 6 பள்ளிக் குழந்தைகள் படுகாயமடைந்தனர். உடனடியாக, ஆனந்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப் பட்டனர். பள்ளி பேருந்தை பின்தொடர்ந்து வந்த 15-க்கும் மேற்பட்ட இளை ஞர்கள் ஆனந்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலை யத்திற்கு வந்திருந்த பெற்றோர்களிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து அங்கு வந்த கல்லாவி காவல் ஆய்வாளர் ஜாபர் உசேன், வன்முறைக்கு காரணமான வல்லரசைக் கைது செய்து  அழைத்துச் சென்றார். அப்போது, வல்லரசின் நண்பர்கள் சிலர் காவல் ஆய்வாளரை தலையில் கல்லால் தாக்கினர். ரத்த வெள்ளத்தில் சரிந்த கல்லாவி ஆய்வா ளரை மீட்டு ஆனந்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்கு சேர்த்துள்ளனர். இந்த வன்முறை தாக்குத லில் ஈடுபட்டவர்களை உடன டியாக கைது செய்ய வேண்டி யும், கிராமத்தின் மையத் தில் உள்ள டாஸ்மாக் கடையை உடனடியாக மாற்ற வலியுறுத்தியும் ஆனந்தூர், அம்பேத்கர் நகர், கொட்டாவூர், கரியம்பதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து ஒரு மணி நேரத்திற்கு மேல் பாதிக்கப்பட்டது. இது குறித்து வழக்குப்  பதிவு செய்த காவல்துறை யினர், 13 பேரைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த வன்முறை தாக்குதலில் சம்பந்தப்பட்ட தலைமறை வான சிலரைத் பிடிக்க தனிப்படையும் அமைத் துள்ளனர்.