தமிழ்நாடு அறிவியல் இயக்கம், இந்திய மாணவர் சங்கம், தமிழ்நாடு முற்போக்கு சிறார் எழுத்தாளர் சங்கம், பாலர் அரங்கம் ஆகியோருடன் இணைந்து பாரதி புத்தகாலயம் நடத்தும் குழந்தைகள் புத்தகத் திருவிழா வெள்ளியன்று (மே 10) தேனாம்பேட்டை அரும்பு அரங்கத்தில் தொடங்கியது. இந்த விழாவை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் வே.வசந்திதேவி தொடங்கி வைத்தார். வட்டார கல்வி அலுவலர் இரா.கணேசன் விற்பனையை தொடங்கி வைக்க, கரெடி டெல்ஸ் பிரதீப் பெற்றுக் கொண்டார். பாரதி புத்தகாலயம் பதிப்பாளர் க.நாகராஜன், பாலர் சங்க பொறுப்பாளர் எஸ்.வனஜ குமாரி, அறிவியல் செயல்பாட்டாளர் த.மோகனா, மொழிபெயர்ப்பாளர் கி.ரமேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மே 20ந் தேதி வரை காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை நடைபெற உள்ள இந்த புத்தக விழாவில் தினசரி குழந்தை எழுத்தாளர்கள் கலந்து கொண்டு பேசுகின்றனர். இந்த கண்காட்சியில் புத்தகங்களுக்கு 25 விழுக்காடு கழிவு வழங்கப்படுகிறது.