tamilnadu

img

தீக்கதிர் முக்கிய செய்திகள்

தலைமை காஜி மறைவுக்கு  முதல்வர்  ரங்கசாமி இரங்கல்

புதுச்சேரி, மே.25- தமிழக அரசின் தலைமை காஜி, சலாவுதீன் முகமது அய்யூப் சாகிப் மறைவிற்கு  முதல்வர் ரங்கசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள  செய்தியில் கூறியிருப்பதாவது:- தமிழக அரசின் தலைமை காஜி, சலாவுதீன் முகமது அய்யூப் சாகிப் காலமானார் என்கிற செய்தி மிகவும் வருத்தமளிப்பதாக உள்ளது. அரபு மொழி மற்றும் இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்ற அவர், இஸ்லாமிய போதனைகள் பற்றிய பரந்துபட்ட அறிவு கொண்டவர். தனது முழு வாழ்க்கையையும் இஸ்லாமிய சமூகத்திற்கு சேவை செய்வதற்காக அர்ப்பணித்து சிறந்த முன்மாதிரியாகத் திகழ்ந்தவர். இஸ்லாமிய சமூகத்தினரின் அன்பிற்கு பாத்திரமான அவர், மதங்களைக் கடந்து ஒற்றுமையின் உருவமாகத் திகழ்ந்து, தேசத்திற்கு அவர் செய்த சேவைகளை மக்கள் என்றென்றும் நினைவில் வைத்திருப்பர். அன்னாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தின ருக்கும், இஸ்லாமிய சொந்தங்கள் அனை வருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

பணிபுரியும் பெண்களுக்கான பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் மாதர்சங்க மாநாடு கோரிக்கை

புதுச்சேரி, மே 25- தொழிற்சாலைகளில் பணிபுரியும் பெண்களுக்கான பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என்று மாதர் சங்க  மணணாடிபட்டு மாநாடு வலியுறுத்தியுள்ளது. அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் புதுச்சேரி மண்ணாடிபட்டு கமிட்டி மாநாடு திருவண்டார்கோயிலில் நடைபெற்றது. மாநாட்டிற்கு சிவசங்கரி, தவமணி ஆகி யோர் கூட்டாக தலைமை தாங்கினார். மாநாட்டை துவக்கி வைத்து மாதர் சங்க புதுச்சேரி மாநில செய லாளர் இளவரசி பேசினார். பால் உற்பத்தியாளர் சங்க தலைவர் அன்புமணி, விவசாய தொழிலாளர் சங்க தலைவர் விநாயகம், அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தின் தலைவர் தட்சிணாமூர்த்தி ஆகியோர் மாநாட்டை வாழ்த்தி பேசினார்கள். கமிட்டி செயலாளர் உமா சாந்தி மாநாட்டு வேலை அறிக்கை வாசித்தார். மாத சங்க மாநில தலைவர் முனியம்மாள்,துணைத் தலை வர் சத்யா உள்ளிட்ட திரளான பிரதிநிதிகள் மாநாட்டில் பங்கேற்றனர். புதிய நிர்வாகிகள்  மாதர்  சங்கத்தின்  மண்ணாடிப்பட்டு கமிட்டிக்கு 11 உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர். கமிட்டியின் தலை வராக தவமணி, செயலாளராக சிவசங்கரி, பெருளாளராக பூமாதேவி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.  தீர்மானம்  புதுச்சேரி நியாய விலைக் கடைகளில் அனைத்து அத்தியாவசிய பண்டங்களை குறைந்த விலையில் வழங்க வேண்டும். கிராமப்புற பகுதிகளுக்கு பேருந்து வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும். புதிய வேலை வய்ப்புகளை உருவாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் புதுச்சேரி அரசை வலியுறுத்தி நிறைவேற்றப்பட்டது.

வண்டிபாளையம் ஜிஎஸ்டி சாலையில் வேன் கவிழுந்து 10 பேர் காயம்  

கள்ளக்குறிச்சி,மே 25– உளுந்தூர்பேட்டை அருகே உள்ள வண்டி பாளையம் ஜிஎஸ்டி சாலையில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வேன், சாலையின் தடுப்பு கட்டையை தாண்டி எதிர் திசையில் உள்ள சாலையில் தலைக்குப்புற கவிந்து விபத்துக்குள்ளானது. இதில் 10க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இதனால் சென்னை திருச்சி ஜிஎஸ்டி சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அரியலூர் மாவட்டம் செந்துறையில் இருந்து ஒரு வேனில் சுமார் 18க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்கொண்டு  சென்னை மணலி பகுதியில் கருமகாரிய நிகழ்ச்சிக்காக சென்றனர்  இந்த வேனை செந்துறை பகுதியைச் சேர்ந்த இளந்தமிழன் என்பவர் ஓட்டி வந்தார் இந்த வேன் கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் உள்ள வண்டிப்பாளையம் அன்னபூர்ணா உணவகம் எதிரே உள்ள ஜிஎஸ்டி சாலையில் சென்றபோது முன்னாள் சென்ற கார் திடீர் என்று வளைந்ததால்  கார் மீது மோதாமல் இருக்க  பிரேக் அடித்தபோது கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையில் நடுவில் உள்ள தடுப்பு கட்டையை தாண்டி எதிர் திசையில் உள்ள சாலையில் தலை குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் பத்துக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். படுகாயம் அடைந்தவர்களை மீட்டு  உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்  காக அனுப்பி வைத்தனர்.  விபத்துக்குள்ளான வேன் சாலை யின் நடுவில் கிடந்ததால் சென்னை திருச்சி ஜிஎஸ்டி சாலை யில் சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திருநாவலூர் போலீசார்  விபத்தில் சிக்கிய வாகனத்தை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.  போக்குவரத்தையும் சரி செய்தனர். விபத்து குறித்து திருநாவலூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

சாலையில் சுற்றித் திரிந்த இளம்பெண் ஒப்படைப்பு

அம்பத்தூர், மே 25- பூந்தமல்லியில் சாலையோரத்தில் இளம்பெண் ஒருவர் கையில் பைகளுடன் அமர்ந்து கொண்டு தனக்குத் தானே பேசிக் கொண்டிருந்தார். அங்கு பணியில் இருந்த பூந்தமல்லி போக்குவரத்து காவல் ஆய்வாளர் அந்த பெண் வைத்திருந்த பையை சோதனை செய்தார். காவல்துறை மீட்டு விசாரித்ததில் அந்த பெண் கூடு வாஞ்சேரியை சேர்ந்த கீதா (33) என்பதும், இவர் ஆவடி யில் உள்ள தனியார் கல்லூரியில் பேராசிரியராகப் பணி புரிந்ததும், மன நல பிரச்சனை காரணமாக சில மாதங்க ளுக்கு முன்பு அவர் பணியில் இருந்து விலகியதும் தெரிய வந்தது. அந்தபெண்ணை காவல்துறையினர் குடும்பத்தினரிடம் ஒப்படைத்தனர். பெண்ணின் தம்பி பாலாஜி கூறுகையில் அவர் மன அழுத்தத்திற்கு சிகிச்சை பெற்று மருந்து, மாத்திரை சாப்பிட்டதாகவும் ஒரு மாதமாக வீட்டில் இருந்து சென்றவர் வரவில்லை என தெரிவித்தார்.