சென்னை,நவ.26- முன்னாள் பிரதமர் சமூக நீதி காவலர் வி.பி.சிங் புகழுக்கு பெருமை சேர்க்கும் வகையில் அவருக்கு சென்னை மாநிலக் கல்லூரி வளா கத்தில் ரூ.52 லட்சம் செலவில் தமிழ்நாடு அரசின் சார்பில் சிலை அமைக்கப்பட் டுள்ளது. இதன் திறப்பு விழா திங்க ளன்று (நவ.27) காலை 11 மணிக்கு நடை பெறுகிறது. இந்த சிலையை முதல மைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைக்கிறார். அதனை தொடர்ந்து சென்னை கலைவாணர் அரங்கில் நடை பெறும் நிகழ்ச்சியில் அவரது சாதனை களை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் விளக்கி பேசுகிறார்.
வி.பி.சிங் சட்டக் கல்லூரியில் படித்த காலத்தில் காந்திய இயக்கத்தில் தீவிர மாக ஈடுபட்டார். சர்வோதய சமாஜத்தில் இணைந்து, பூமிதான இயக்கத்தில் பங்கெடுத்து தனது நிலங்களை தான மாக வழங்கியவர்
சட்டமன்ற உறுப்பினர்,நாடாளு மன்ற உறுப்பினர், வர்த்தகத் துறை துணை அமைச்சர் போன்ற பல்வேறு பதவிகளை வி.பி.சிங் பதவிகளையும் வகித்துள்ளார். இதனைத் தொடர்ந்து, 1980-ம் ஆண்டு உத்தரப்பிரதேசத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு, வெற்றி பெற்று உத்தர பிரதேச மாநில முதலமைச்சராக மக்க ளால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்.
இவர், அடித்தட்டு மக்கள் பயன் பெறும் வகையில் பல்வேறு நல்ல திட்ட ங்களை கொண்டு வந்து சிறந்த முதல மைச்சராக திகழ்ந்தார். இதனைத் தொடர்ந்து, வி.பி.சிங் 1984 ஆம் ஆண்டு நிதி அமைச்சர் மற்றும் பாதுகாப்புத் துறை அமைச்சர் ஆகிய பதவிகளை யும் வகித்தார். பின்பு, 1989-ம் ஆண்டு பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
பிரதமராக இருந்த போது தமிழ்நாட்டு மக்களின் வாழ்வாதார பிரச்சனையான காவிரி நதிநீர் பிரச்சி னைக்கு தீர்ப்பாயத்தை அமைத்து தந்தவர். சென்னையில் அமைந்துள்ள உள்நாட்டு விமான நிலையத்திற்கு பெருந்தலைவர் காமராஜர் பெயரையும், பன்னாட்டு விமான நிலையத்திற்கு பேரறிஞர் அண்ணாவின் பெயரையும் சூட்டினார். அண்ணல் அம்பேத்கருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை நிறைவேற்றினார்.
பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவதற்கான பி.பி. மண்டல் தலைமையில் இரண்டாவது பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் சமூக ரீதியாகவும், கல்வியில் பின்தங்கிய பிற்படுத்தப்பட்ட வகுப்பி னர் என்று அழைக்கப்படும் சமூகத் திற்கு அரசுப் பணியிடங்களில் 27 விழுக்காடு இட ஒதுக்கீட்டை வழங்க லாம் என்ற பரிந்துரையை செயல் படுத்திய சமூக நீதிக் காவலர் வி.பி.சிங்.
இத்தகைய சிறப்புமிக்க முன்னாள்பிரதமர்வி.பி.சிங்கின் புகழுக்கு பெருமை சேர்க்கும் வகை யில் மாநிலக் கல்லூரி வளாகத்தில் நடை பெறும் உருவச்சிலை திறப்பு விழா நிகழ்ச்சியில் உத்தரபிரதேச மாநில முன்னாள் முதலமைச்சர் அகிலேஷ் யாதவ், மற்றும் அமைச்சர் அன்னாரது குடும்பத்தினர்கள், மக்களவை, மாநிலங்களவை, சட்ட மன்ற உறுப்பினர்கள் கலந்து கொள் கின்றனர்.