சிறை கைதிகளின் நலனுக்காக சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாட்டில் உள்ள சிறை நூலகங்களுக்கு 1,500க்கும் மேற்பட்ட புத்தகங்கள் நன்கொடையாக வழங்கினார். நன்கொடையாக பெறப்பட்ட 1,500 புத்தகங்கள் தமிழ்நாட்டில் உள்ள 140க்கும் மேற்பட்ட சிறைகளுக்கு பகிர்ந்தளிக்கப்படும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.