சென்னையில் மக்களவைத் தேர்தலுக்கான தபால் வாக்குகளை சேகரிக்கும் பணி இன்று காலை 10:30 மணிக்கு தொடங்கி ஏப்ரல் 13 வரை நடைபெறுகிறது.
சென்னை மாவட்டத்துக்கு உட்பட்ட 3 நாடாளுமன்ற தொகுதிகளில் மொத்தம் 11,369 மாற்றுத்திறனாளிகளும், 63,751 பேர் 85 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களும் வாக்காளர்களாக உள்ளனர். இவர்களுக்கு கடந்த மாதம் 17-ஆம் தேதி முதல் 25-ஆம் தேதி வரையில் தபால் மூலம் வாக்களிக்க படிவம் வழங்கப்பட்டது. அதில் தபால் வாக்களிக்க 85 வயதுக்கு மேற்பட்ட 4,176 முதியவர்கள், 366 மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பித்துள்ளனர். இந்த நிலையில், தபால் வாக்குகளை சேகரிக்கும் பணி இன்று காலை 10:30 மணிக்கு தொடங்கி ஏப்ரல் 13 வரை நடைபெறுகிறது. இந்த பணிக்காக சென்னையில் 67 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.