சென்னை, நவ.27- அந்தமான் அருகே உருவாகி யுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி வங்கக் கடலில் வலுப்பெற்று புயலாக மாறும் என்று வானிலை ஆய்வு மையம் தெரி வித்துள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “தெற்கு அந்தமான் கடல் மற்றும் மலாக்கா பகுதிகளில் வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இந்த காற்ற ழுத்த தாழ்வுப் பகுதி மேற்கு வட மேற்கு திசையில் நகர்ந்து நவம்பர் 29 அன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலு பெறக்கூடும்.
இந்த காற்றழுத்த மண்டலம் மேலும் வலு பெற்று டிசம்பர் 1 ஆம் தேதி புய லாக வலு பெறுகிறது. வங்கக் கடலில் நடப்பு வடகிழக்கு பருவத்தில் 2வது புயல் உருவாகிறது.
வங்கக்கடலில் நடப்பு வடகிழக்கு பருவத்தில் ஏற்கெனவே மிதிலி புயல் உருவானது.புதிய புயலுக்கு மியான்மர் நாடு பரிந்துரைத்த ‘மிக்ஜாம்’ என்ற பெயர் வைக்கப்படும் என்று தெரிவிக் கப்பட்டுள்ளது.
மீனவர்களுக்கு எச்சரிக்கை
டிசம்பர் 1ஆம் தேதி 90 கிலோ மீட்டர் வேகத்தில் புயல் காற்று வீசும் என்பதால், மீனவர்கள் பாதுகாப்பாக இருக்கும்படி வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இது குறித்த அறிவிப்பு வருமாறு
கடல் காற்றின் வேகம் படிப்படி யாக அதிகரித்து டிசம்பர் 1 ஆம் தேதி மணிக்கு 90 கிலோமீட்டர் வேகத்தை எட்டும்’ தெற்கு மற்றும் வடக்கு அந்த மான் கடல் பகுதி, தென்மேற்கு, தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் 40 லிருந்து 45 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும். இதில், நான்கு நாட்க ளுக்கு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம்.
அதேபோல் தெற்கு மற்றும் வடக்கு அந்தமான் கடலை ஒட்டிய பகுதி, தென்கிழக்கு வங்கக்கடலில் 55 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும், நவம்பர் 29 ஆம் தேதி தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் மணிக்கு 45 லிருந்து 65 கிலோ மீட்டர் வேகம் சூறைக் காற்று வீசும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.