160 ஏக்கர் அரசு நிலத்துக்கு செலுத்த வேண்டிய வாடகை பாக்கி ரூ.730.86 கோடியை ஒரு மாதத்தில் செலுத்த சென்னை ரேஸ் கிளப் நிர்வாகத்துக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
1946-ஆம் ஆண்டில் அரசு நிலத்தை ரேஸ் கிளப்புக்கு ஆண்டுக்கு ₹614.13 ரூபாய் வீதம் என 99 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு வழங்கப்பட்டது. இந்த சூழலில், 1970 முதல் உயர்த்தப்பட்ட வாடகை பாக்கியை செலுத்த வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், வாடகை பாக்கி ரூ.730.86 கோடியை ஒரு மாதத்தில் செலுத்த சென்னை ரேஸ் கிளப் நிர்வாகத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வாடகை பாக்கி செலுத்தத் தவறினால், இந்நிலத்தை அரசு மீட்டு, மக்கள் நலனுக்கு பயன்படுத்தலாம்; மேலும், மாநிலம் முழுவதும் அரசு நிலங்களின் குத்தகைகளை மறு ஆய்வு செய்ய வேண்டும் என்றும் நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் உத்தரவிட்டுள்ளார்.