செந்தில் பாலாஜி ஜாமீன் மனு மீது அமலாக்கத்துறை பதிலளிக்க சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற உத்தரவிட்டுள்ளது.
சட்டவிரோதப் பணப்பரிமாற்ற தடை சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் விசாரிக்கும் என்று கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னை உயர்நீதிமன்ற உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து, இவ்வழக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. இந்த மனுவை இன்று விசாரித்த சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம், இது தொடர்பாக அமலாக்கத்துறை பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.