tamilnadu

img

சென்னை புத்தகக்காட்சி இன்று தொடங்குகிறது

சென்னை, ஜன. 2 - 47ஆவது சென்னை புத்தகக் காட்சி  புதனன்று (ஜன.3) நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் தொடங்குகிறது. தென்னிந்திய புத்தக விற்பனை யாளர் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் (பபாசி) நடத்தும் இந்த புத்தக  விற்பனைகள், தமிழ்நாடு முதல மைச்சர் மு.க. ஸ்டாலின் மாலை 4.30 மணி அளவில் தொடங்கி வைக்கிறார்.  அதனைத் தொடர்ந்து ‘முத்தமிழறிஞர் கலைஞர் பொற்கிழி விருது’களையும், பபாசி விருதுகளையும் வழங்குகிறார்.  

இந்நிகழ்வில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யா மொழி கலந்து கொள்கிறார். ஜன.21 வரை 19 நாட்கள் நடைபெற  உள்ள இந்த புத்தகக் காட்சி விடுமுறை  நாட்களில் காலை 11 மணி முதல் இரவு  8.30 மணி வரையிலும், வேலை நாட்களில் பிற்பகல் 2 மணி முதல் இரவு  8.30 மணி வரை நடைபெறும்.

அனைத்து அரங்குகளிலும் நூல்களுக்கு  10 விழுக்காடு கழிவு வழங்கப்படும். பபாசி உறுப்பினர்களுக்கு 750  அரங்குகள், உறுப்பினர் அல்லாத வர்களுக்கு 150 அரங்குகள் என 900 அரங்குகள் ஒதுக்கப்பட்டுள்ளன. தமிழக அரசின் தமிழ்நாடு பாடநூல் நிறுவனம் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம், உலகத் தமிழாராய்ச்சி  நிறுவனம்,  ஒன்றிய அரசின் சாகித்திய  அகாதமி, நேஷனல் புக் டிரஸ்ட், பப்ளி கேஷன் டிவிஷன், தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம் மற்றும் தொல்லியல் துறை ஆகிய நிறுவனங்களும், இல்லம் தேடி கல்வி இயக்கம் அரங்கு களை அமைத்துள்ளன.

வெளிநாடு களை சேர்ந்த பதிப்பகங்களும் பங்கேற்கின்றன. ஒவ்வொரு நாள் மாலையில் சிந்தனை அரங்கில் தமிழகத்தின் தலைசிறந்த அறிஞர்கள், எழுத்தாளர் களின் உரை வீச்சுக்கள் நடைபெற உள்ளன. நிறைவு நாள் நிகழ்வில் நீதியரசர் ஆர். மகாதேவன் பங்கேற்க உள்ளனர்.