tamilnadu

img

சென்னை மற்றும் புதுச்சேரி முக்கிய செய்திகள்

வேடந்தாங்கல்  சரணாலய  பரப்பளவு 3  கிலோ  மீட்டராக  குறைப்பு  

உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்

சென்னை, ஜூலை 24- வேடந்தாங்கல் சரணா லயத்தின் சுற்று பரப்பளவை  3 கிலோ மீட்டராக குறைக் கப்பட உள்ளதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. செங்கல்பட்டு மாவட்டத் தில், வேடந்தாங்கல் பறவை கள் சரணாலயம் உள்ளது. இந்த சரணாலயம் அருகே  செயல்படும் சன் பார்மா நிறு வனத்தை விரிவாக்கம் செய்ய தடைகோரி சென்னை  உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கை விசா ரித்த நீதிபதிகள் வினித் கோத்  தாரி மற்றும் கிருஷ்ணன் ராம சாமி அடங்கிய அமர்வு முன்பு, தொழிற்சாலை விரி வாக்கம் தொடர்பாக சன்  பார்மா நிறுவனம் மத்திய சுற்றுச்சூழல் அனுமதி பெற்றி ருந்தாலும், அதை மத்திய வன விலங்கு பாதுகாப்பு துறை நிராகரித்துள்ளது. எனவே, தொழிற்சாலை விரி வாக்கம் செய்ய கடந்த  மாதம் அனுமதி மறுக்கப் பட்டுள்ளது. சரணாலயம் அமைந்திருக்கும் பகுதி களை மேம்படுத்தும் நோக்கி லேயே 5 கிலோ மீட்டர் என்ற  சுற்றுப் பரப்பளவை 3 கிலோ மீட்டராக குறைக்க அரசு முடிவெடுத்துள்ளது என்று தமிழக அரசு தரப்பில் கூறப்பட்டது. இதனையடுத்து நீதிபதி கள், வேடந்தாங்கல் நில பரப்பு குறைக்கப்படுவதற்கு எதிராக மனுதாரர் மத்திய அர சிடம் மனு அளித்து நிவார ணம் பெற்று கொள்ளலாம் என்று தெரிவித்து வழக்கை முடித்து வைத்தனர்.

கடைகள் 9 மணி வரை திறக்க அனுமதி வேண்டும்: வணிகர் சங்கம் கோரிக்கை

சென்னை, ஜூலை 24- தமிழகம் முழுவதும் இரவு 9 மணி வரை  கடைகள் திறக்க அனுமதிக்க வேண்டும் என்று  தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு  வலியுறுத்தி உள்ளது. இது தொடர்பாக சங்கத்தின் மாநிலத்  தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சென்னை கோயம்பேடு சந்தையை மீண்டும் திறக்க வேண்டும், பொது போக்கு வரத்திற்கும் அனுமதி அளிக்க வேண்டும், தமிழ்நாடு முழுவதும் அனைத்து வணிகக் கடைகளும் இரவு 9 மணி வரை திறந்து வைத்து வணிகம் செய்ய அனுமதி அளிக்க வேண்டும். பொதுமுடக்கத்தின் போது சீல் வைக்கப்பட்ட கடைகளை நிபந்தனையும் இன்றி திறக்க அனுமதிக்க வேண்டும். வணிக  நிறுவனங்கள் மீதான வழக்குகளை திரும்ப பெற வேண்டும், திருமண மண்டபங்கள், ஸ்டார் ஹோட் டல்கள், தங்கும் விடுதிகள், சுற்றுலாத்துறை சார்ந்த தொழில்கள், மால்கள், உடற்பயிற்சி மையங்கள் போன்றவை செயல்பட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப் பட்டுள்ளது.

சுகாதாரத்துறைக்கும் மாநகராட்சிக்கும் இடையே ஒருங்கிணைப்பு உள்ளதா?

சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி

சென்னை, ஜூலை 24- கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட வர்கள் எங்கெங்கு அழைத்து செல்லப்படு கிறார்கள், எங்கு அனுமதிக்கப்படுகிறார்கள் என்ற பதிவேடு பராமரிக்கப்படுகிறதா? என்று  சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பி யுள்ளது. கொரோனா தொற்று உறுதி செய்யப்  பட்டு ராஜிவ்காந்தி அரசு பொது மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்ட முதியவர் ஆதி கேசவன் மருத்துவமனையிலிருந்து மாய மானார். தனது தந்தையை மீட்க கோரி அவரது  மகன் துளசிதாஸ் ஆட்கொணர்வு மனுத் தாக்கல் செய்திருந்தார். அந்த வழக்கு நீதிபதி கள் என்.கிருபாகரன், வி.எம்.வேலுமணி அமர்வில் வெள்ளியன்று (ஜூலை 24) மீண்டும்  விசாரணைக்கு வந்தது. அப்போது, சென்னை  மாநகராட்சி ஆணையர் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.  அதில், காய்ச்சல் முகாமிலிருந்து ஒரு வரை கண்டறிவது முதல் ஆம்புலன்ஸ் மூலம்  அழைத்து வந்து மருத்துவமனையில் சேர்ப்ப துடன் தங்கள் எல்லை முடிந்து விடுவதாக வும், அதற்கு பின்னர் சுகாதார துறை கட்டுப்  பாட்டில்தான் ஒரு நோயாளி இருப்பார் என  தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், மாய மான ஆதிகேசவனை அவரது குடும்பத்தினர் மற்றும் காவல்துறை போல தாங்களும் தேடி  வருவதாக கூறப்பட்டுள்ளது. அப்போது நீதிபதிகள், கொரோனா நோயாளிகளை கையாள்வதில் சுகாதார துறை மற்றும் மாநகராட்சி இடையே போதிய ஒருங்கிணைப்பு உள்ளதா என்றும், தொற்று உறுதிசெய்யப்பட்டவர்கள் எங்கெங்கு அழைத்து செல்லப்படுகிறார்கள், எங்கு அனு மதிக்கப்படுகிறார்கள் என்ற பதிவேடு பரா மரிக்கப்படுகிறதா என்றும் கேள்வி எழுப்பி னர். அதற்கு மாநகராட்சி தரப்பில், தங்க ளுக்கும் சுகாதார துறைக்கும் இடையே போதிய ஒருங்கிணைப்பு உள்ளதாகவும், பரா மரிக்கப்படும் பதிவேடுகளை தாக்கல் செய்வ தாகவும் தெரிவிக்கப்பட்டது. மேலும்,  ஆதி கேசவனை பற்றி அனைத்து மருத்துவமனை களிலும் விசாரிக்கும் பணிகளை மேற் கொள்ள அறிவுறுத்தப்பட்டு உள்ளதாகவும், அதுகுறித்து முழுமையாக விளக்கம் அளிக்க  ஒரு வார அவகாசம் வேண்டுமென கோரிக்கை  வைக்கப்பட்டது. இதையடுத்து வழக்கு விசா ரணை ஒரு வாரத்திற்கு ஒத்திவைத்துள்ளனர்.

புதுச்சேரியில் எம்.ஜி.ஆர். சிலை அவமதிப்பு

புதுச்சேரி, ஜூலை 24- புதுச்சேரி வில்லியனூர் பகுதியில் அமைந்துள்ள தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் சிலை மீது காவிதுண்டு அணிவித்து அவமரியாதைசெய்யப்பட்டிருந்தது. இது குறித்து புதுச்சேரி சட்டப்பேரவையில் அ.தி.மு.க உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த முதல்வர் நாராயணசாமி, காவித்துண்டு அணிவித்த குற்றவாளிகளை கைது செய்ய நடவடிக்கை  எடுக்கப்பட்டுள்ளது என்றார்.   தலைவர்களின் சிலையை அவமதிப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர்தெரிவித்தார்.

யூ-டியூபர் மாரிதாஸ் மீது  5 பிரிவுகளில் வழக்குப்பதிவு

சென்னை, ஜூலை 24- யூ-டியூபர் மாரிதாஸ் மீது சென்னை சைபர் கிரைம் காவல்துறையினர் 5 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர். சமூக வலைதளங்களில் மத அடிப்படைப் பிரசாரமும், ஊடகங்களின் மீது அவதூறும் பரப்பி வந்த யூ-டியூபர் மாரிதாஸ், அண்மையில் நியூஸ் 18 தொலைக்காட்சி தமக்கு மெயில் அனுப்பியதாக போலி இ- மெயில் ஒன்றை வைத்து தவறான தகவலை பரப்பி வந்தார். இதையடுத்து மாரிதாஸ் மீது நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சி நிறுவனம் சார்பில் புகார் அளிக்கப்பட்டது. இதுகுறித்து விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், மாரிதாஸ் மீது ஆவணங்களை பொய்யாக புனைவது, பொய்யாக புனையப்பட்ட டிஜிட்டல் ஆவணத்தை உண்மையானது போல காட்டுவது, நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் போலி ஆவணம் தயாரிப்பது மற்றும் தகவல் தொழில் நுட்பங்களை தவறாக கையாள்வது தொடர்பான 2 சட்டப் பிரிவுகள் என 5 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடி  உரையை புறக்கணித்த அமைச்சர்கள் 

புதுச்சேரி, ஜூலை 24- துணைநிலை ஆளுநர் கிரண்பேடியின் உரையை புதுச்சேரி அமைச்சர்கள் புறக்கணித்தனர். புதுச்சேரி பட்ஜெட்கூட்டத் தொடர் ஜூலை 20 அன்று துவங்கி நடை பெற்று வருகிறது. கூட்டத்தொடரின் 5ஆவது நாளாக  வெள்ளியன்று (ஜூலை 24) துணைநிலை ஆளுநர் கிரண்பேடி உரையாற்றினார். ஆளு நர்   உரையாற்ற துவங்கியவுடன் சுகாதாரத்  துறை அமைச்சர் மல்லாடிகிருஷ்ணாராவ், முதல்வரின் நாடாளுமன்றச் செயலர் லட்சுமி நாராயணன், அரசு கொறடா அனந்தராமன் ஆகியோர் துணைநிலை ஆளுநரின்  சமீபத்திய நடவடிக்கையை கண்டித்தும், அவரது  உரையை புறக்கணித்தும் வெளி நடப்பு  செய்தனர்.   அதேப்போல் கருப்பு சட்டை அணிந்து கூட்டத்தொடரில் பங்கேற்ற ஆளுங்கட்சி உறுப்பினர் ஜெயமூர்த்தியும்  வெளிநடப்பு செய்தார். பொதுப்பணித்துறை அமைச்சர் நமச்சிவாயம் அவைக்கூட்டத்திலேயே பங்கேற்கவில்லை. இதனால் துணைநிலை ஆளுநர் உரையாற்றும் போது ஆளுங்கட்சி உறுப்பினர்கள் இருக்கைகள் காலியாக இருந்தன. சட்டமன்ற உறுப்பினர்கள் மனநல மருத்து வர்களை பார்க்க வேண்டும் என்று ஆளுநர் கிரண்பேடி சமீபத்தில் சமூக ஊடகத்தில் கூறி யிருந்த கருத்துக்கு எதிராக அவரது உரையை  புறக்கணித்தாக வெளிநடப்பு செய்த  ஆளுங்கட்சி உறுப்பினர்கள் செய்தியா ளர்களிடம் தெரிவித்தனர். பொதுவாக பட்ஜெட் தாக்கல்செய்யப் படுவதற்கு முன்பு துணை நிலை ஆளுநர் பேரவையில் உரையாற்றவது வழக்கம். ஆனால், கூட்டத்தொடர் துவங்கி நான்கு நாட்க ளுக்கு பிறகு ஆளுநர் உரையாற்றியுள்ளார்.