கல்விக் கட்டணம்: அனைத்து வழக்குகளும் ஜூலை 17ல் விசாரணை
சென்னை, ஜூலை 10- தனியார் பள்ளிகளின் கல்விக் கட்டணம் தொடர்பான அனைத்து வழக்குகளும் வருகிற 17-ம் தேதி விசாரிக்கப்படும் என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகம் முழுவதும் உள்ள தனியார் பள்ளிகளில் கல்வி கட்டணங்களை வசூலிக்கக்கூடாது என்று தமிழக அரசு கடந்த ஏப்ரல் 20-ம் தேதி அர சாணை பிறப்பித்தது. அதேசமயம், ஆசிரி யர்கள் ஊழியர்களுக்கு ஊதியம் வழங்க வும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த அரசாணையை ரத்து செய்யக் கோரி யும், அதற்கு தடை விதிக்கக் கோரியும் தமிழ் நாடு தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு மற்றும் அகில இந்திய தனியார் கல்வி நிறுவனங்கள் கூட்டமைப்புகள் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உயர்நீதி மன்றம், தவணை முறையில் கட்டணம் வசூ லிப்பது தொடர்பாக அரசுக்கு கோரிக்கை மனு அனுப்ப மனுதாரர் சங்கத்துக்கு அறிவுறுத்தியிருந்தது. இந்த வழக்கில், தமிழக உயர் கல்வித் துறை தாக்கல் செய்த பதில் மனுவில், தனி யார் கல்லூரிகள் ஆகஸ்ட், டிசம்பர் மற்றும் 2021 ஏப்ரல் மாதங்கள் என மூன்று தவணை களாக கட்டணம் வசூலிக்க அனுமதிப்பது என முடிவு செய்துள்ளதாக தெரி விக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு வெள்ளி யன்று (ஜூலை 10) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, பல்வேறு தரப்பினரும் வழக்கு தொடர்ந்துள்ளதால் அனைத்து வழக்குகளும் வருகிற 17-ம் தேதி விசாரிக்கப்ப டும் என்று நீதிபதி அறிவித்துள்ளார்.
தனியார் மருத்துவமனையில் காய்ச்சலுக்கு சிகிச்சை அளிக்கக் கூடாது: சார் ஆட்சியர் உத்தரவு
கடலூர், ஜூலை 10- விருத்தாசலம் தனியார் மருத்துவமனையில் காய்ச்ச லுக்கு சிகிச்சை அளிக்கக் கூடாது என்றும், அரசு மருத் துவமனையில் மட்டுமே சிகிச்சை அளிக்க வேண்டும் என்றும் சார் ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் அரசு மருத்துவமனை உள்ளது. இங்கு விருத்தாசலத்தை சுற்றியுள்ள நூற்றுக்கும் மேற்பட்ட கிராம மக்கள் உள் நோயாளியாகவும், புறநோ யாளிகளாகவும் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த மார்ச் மாதம் முதல் கொரோனா தொற்று அதி கம் இருப்பதால் இங்கு பிர சவத்துக்கு வரும் பெண்கள் மட்டுமே அதிகமாக வரு கின்றனர். கொரோனா நோயாளிகளும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் விருத்தா சலம் சார் ஆட்சியர் பிரவின் குமார் அரசு மருத்துவ மனையை ஆய்வு செய்தார். பின்னர் அங்குள்ள தனியார் மருத்துவமனையிலும் ஆய்வு செய்தார். அப்போது மருத்துவமனைக்கு வருப வர்களுக்கு கிருமி நாசினி கொடுத்து கைகளை சுத்த மாக வைக்க வேண்டும். பின்னர் அவர்களுக்கு வெப்ப பரிசோதனை மேற் கொள்ள வேண்டும். வெப் பம் அதிகமாக இருந்தால் அவர்களை வெளியே நிறுத்தி, மருத்துவருக்கு தக வல் கொடுக்க வேண்டும். காய்ச்சலுடன் வரும் நோயாளிகளுக்கு தனியார் மருத்துமனையில் சிகிச்சை அளிக்கக் கூடாது. அவர் களை அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று தனியார் மருத்துவமனை மருத்துவரி டம் சார் ஆட்சியர் கூறினார்.
அரசுப் பள்ளிகளில் நீட் பயிற்சி ஆகஸ்ட் இறுதி வரை நீட்டிப்பு
சென்னை, ஜூலை 10- மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வை செப்டம்பருக்கு ஒத்தி வைத்து மத்திய அரசு அறிவித்துள் ளதை அடுத்து தமிழக அரசுப்பள்ளி மாணவர்களுக்கான நீட் பயிற்சி வகுப்புகளை ஆகஸ்ட் இறுதி வரை நீட்டிப்பதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. ஜூலை 26-ஆம் தேதி நடைபெற இருந்த மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு, செப்டம் பர் 13-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப் பட்டுள்ளதையடுத்து, நீட் தேர்வு எழுத உள்ள அரசுப் பள்ளி மாணவர் களுக்கான ஆன்லைன் நீட் பயிற்சி வகுப்புகள் ஆகஸ்ட் மாதம் இறுதி வரை நீட்டிக்கப்படுவதாக பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது நீட் தேர்வினை எழுதும் மாண வர்களுக்கு e-box என்ற தனியார் நிறுவனத்தின் சார்பில் ஆன்-லைன் வழியில் நீட் தேர்வுக்கான பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது . இந்த மாதம் இரண்டாவது வாரம் வரை நடைபெற இருந்த பயிற்சி வகுப்பு கள் , ஆகஸ்ட் முழுவதும் நீட்டிக்கப் பட்டுள்ளது.
சென்னையில் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் இயங்க அனுமதி
சென்னை, ஜூலை 10- சென்னைப் பெருநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், 10 சதவீதப் பணியாளர்களுடன் இயங்குவதற்கு மாநில அரசு அனுமதி அளித்துள்ளது. இதுதொடர்பாக மாநில அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், நோய்க் கட்டுப்பாட்டு பகுதிகளுக்கு இந்த அனுமதி பொருந்தாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் வீட்டிலும், பணிபுரியும் இடங்களிலும் அடிக்கடி சோப்பு போட்டு கைகழுவுவது, முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியை பராமரிப்பது போன்றவற்றை தவறாமல் கடைபிடிக்குமாறும் அதில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
கொரோனா தொற்றுக்கு பல்கலை. அதிகாரி பலி
புதுச்சேரி, ஜூலை 10- புதுச்சேரி மத்திய பல்கலைக்கழக மக்கள் தொடர்பு அதிகாரி கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். புதுச்சேரியில் வெள்ளிக்கிழமை மேலும் 72 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,272 ஆகவும், சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 618 ஆகவும் அதிகரித்துள்ளது. புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் உள்ள மக்கள் தெ?டர்பு அலுவலகத்தில் பணிபுரிந்து வந்த 57 வயதுடைய முதுநிலை அதிகாரிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இதனால் இறப்பு எண்ணிக்கை 17ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 637 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இத்தகவலை புதுச்சேரி சுகாதாரத்துறை இயக்குனர் மோகன்குமார் தெரிவித்தார்.
கொரோனா: விஐடி பல்கலைக்கழக நுழைவுத் தேர்வு ரத்து
வேலூர், ஜூலை 10- விஐடி பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் படிப்பதற்கு ஆண்டுதோறும் விஐடி நுழைவுத் தேர்வு நடத்தப்படும். ஆனால் தற்போது கொரானா வைரஸ் தொற்றால் நாடெங்கும் அசாதாரண சூழ்நிலை நிலவுவதால், மாணவர்கள் நலன் கருதி இந்த ஆண்டு நுழைவுத் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் மாணவர்கள் தங்களின் 12ஆம் வகுப்பு இயற்பியல், வேதியியல், கணிதம் மற்றும் உயிரியல் மதிப்பெண் அடிப்படையில் தங்களுக்கு விருப்பமான பொறியியல் பாடப்பிரிவில் சேர்ந்து படிக்கலாம். அதேபோல் ஜே.இ.இ தேர்வு மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு விஐடியில் சேர்வதற்கு முன்னுரிமை அளிக்கப்படும். மாணவர்கள் தங்களின் ஜே.இ.இ. மதிப்பெண்களை பல்கலைக்கழக இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வந்தவுடன் மாணவர்கள் தாங்கள் பெற்ற மதிப்பெண்களை உடனடியாக இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். மேலும் விவரங்களுக்கு கீழ்க்கண்ட இ-மெயிலை தொடர்பு கொள்ளலாம் ugadmission@vit.ac.in, வாட்ஸ் அப் தொடர்பு எண்: 95666 56755, அதேபோல் கட்டணமில்லா தொலைபேசி தொடர்பு எண் 1800 102 0536 வழியாகவும் தங்கள் சந்தேகங்களுக்கான பதிலை தெரிந்து கொள்ளலாம்.
காலமானார்
சென்னை, ஜூலை 10- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆயிரம் விளக்கு பகுதி, 113வது வட்ட கட்சி கிளை உறுப்பினரும், ஆட்டோ டாக்சி ஓட்டுநர் சங்கத்தின் தெற்கு பகுதி பொருளாளருமான எம்.கணேசனின் தாயார் எம்.சகுந்தலா உடல் நலக்குறைவால் வெள்ளியன்று (ஜூலை 10) காலமானர். அவருக்கு வயது 70. அன்னாரது உடலுக்கு கட்சியின் மத்தியசென்னை மாவட்டச் செயற்குழு உறுப்பினர் எஸ்.கே.முருகேஷ், ஆட்டோ சங்கத் தலைவர் புவனேஸ்வரன் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். அன்னாரது உடல் நுங்கம்பாக்கம் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தொடர் போராட்டத்தால் நிலம் மீட்பு
சிதம்பரம், ஜூலை 10- காட்டுமன்னார்குடி வட்டம் மாமங்கலம் கிராமத்தில் தனிநபர் ஆக்கிரமிப்பில் உள்ள இடத்தை மீட்டு 51 தலித் குடும்பங்களுக்கு வீட்டுமனைப்பட்டா, அரசு கட்டிடங்கள் மற்றும் குளங்கள் அமைக்க வேண்டுமென தொடர்ந்து கடந்த 10 ஆண்டுகளாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போராடி வந்தது. இந்நிலையில் அரசு அதிகாரிகள் அந்த நிலத்தை மீட்டனர். அதனைத் தொடர்ந்து காட்டுமன்னார்குடி வட்டாட்சியர் தமிழ்ச்செல்வன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராமச்சந்திரன், இப்ராஹிம், சோழதரம் காவல் உதவி ஆய்வாளர் இளையராஜா, மாமங்கலம் ஊராட்சி மன்றத் தலைவர் மதியழகன் ஆகியோர் பார்வையிட்டு குளம் வெட்டும் பணியை துவக்கி வைத்தனர். இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக் குழு உறுப்பினர் பிரகாஷ், வட்டக் குழு உறுப்பினர் வெற்றிவீரன் சோழத்தரம் பகுதி தலைவர்கள் நமச்சிவாயம், காசிராஜன், கோபாலகிருஷ்ணன், குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.