tamilnadu

img

சென்னை மற்றும் சிதம்பரம் முக்கிய செய்திகள்

கோயம்பேடு வணிக வளாகத்தை திறக்க வணிகர் சங்கம் கோரிக்கை

சென்னை, ஜூலை 31- கோயம்பேடு வணிக வளாகத்தை திறக்க தமிழக  அரசு அனுமதிக்க வேண்டும் என்று தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு வலியுறுத்தி உள்ளது. இது தொடர்பாக சங்கத் தின் தலைவர் ஏ.எம்.விக்கிர மராஜா விடுத்துள்ள அறிக் கையில், 100 நாட்கள் கடந்தும் கோயம்பேடு காய்  கறி, பூ, பழம், உணவு தானிய வளாகங்கள் திறக்கப்  படாமல் உள்ளது. இதனால்  விவசாயிகளின் விளை பொருட்ளுக்கு உரிய விலை  கிடைக்காமலும், பொது மக்களுக்கு சரியான விலை யில் காய்கறிகள் கிடைக்கா மலும் அல்லல்படுகின்றனர். திருமிழிசை தற்காலிக சந்தையில் காய்கறிகள் விற்பனையாகாமல் அழுகி  கழிவுகளாக கொட்டப்ப டும் நிலை உள்ளது. கோயம் பேடு சந்தை திறக்காததால் 10 ஆயிரத்திற்கும் மேற் பட்ட குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப் பட்டுள்ளது. எனவே, கோயம்பேடு வணிக வளா கத்தை உடனடியாக திறக்க அனுமதிக்கக வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார். தங்கும் விடுதிகள், திரு மண மண்டபங்கள், உடற் பயிற்சி மையங்களையும் விரைந்து திறக்க அனு மதிக்க வேண்டும். உணவ கங்களில் அமர்ந்து உணவு உண்பதற்கு இரவு 9 மணி  வரை அனுமதிக்க வேண்டும்  என்றும் அந்த அறிக்கையில் கோரப்பட்டுள்ளது.

பிசிஜி ஆய்வு மையத்தில் 10 ஆண்டுகளுக்கு பிறகு காசநோய் தடுப்பு மருந்து உற்பத்தி

சென்னை, ஜூலை 31- 10 ஆண்டுகளுக்கு பிறகு கிண்டி பிசிஜி  தடுப்பு மருந்து ஆய்வு மையம், குழந்தை களுக்கான காசநோய் தடுப்பு மருந்தை தயாரித்துள்ளது. குழந்தைகளுக்கு காசநோய் வராமல் தடுக்க 1948ம் ஆண்டு முதல் பிசிஜி தடுப்பு  மருந்து கொடுக்கப்பட்டு வந்தது. இதற்கான தடுப்பு மருந்துகளை சென்னை கிண்டியில் உள்ள பிசிஜி தடுப்பு மருந்து ஆய்வு மையம்  தயாரித்து வந்தது. 2008ம் ஆண்டு மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த பாமக-வை சேர்ந்த அன்புமணி ராமதாஸ், பன்னாட்டு நிறுவ னங்களுக்கு ஆதரவாக இந்த தடுப்பு மருந்து  ஆய்வு மையத்தின் உரிமத்தை ரத்து செய்தார். இதனை எதிர்த்து மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி உள்ளிட்ட அமைப்புகள் தொடர்ச்சியாக பெரும் போராட்டத்தை நடத்தின. அதன்பிறகு, மீண்டும் ஆய்வு மையத்திற்கு உரிமம் வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து 10 ஆண்டு களுக்கு பிறகு கிண்டி பிசிஜி தடுப்பு மருந்து  ஆய்வு மையம் மீண்டும் தடுப்பு மருந்தை  தயாரித்துள்ளது. பலகட்ட சோதனைகளுக்கு பிறகு முதற்கட்டமாக 4.50 லட்சம் மருந்து களை மக்கள் பயன்பாட்டிற்காக அனுப்பி வைக்கும் நிகழ்ச்சி வெள்ளியன்று (ஜூலை 31)  கிண்டி ஆய்வு மையத்தில் நடைபெற்றது. அப்போது செய்தியாளர்களிடம் பேசிய ஆய்வு மையத்தின் முன்னாள் இயக்குனரும், தற்போதைய ஆலோசகருமான மருத்துவர் சேகர், இந்தாண்டு ஜூலை மாதம் முதல் 2021ம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் 65 கோடி ரூபாய் செலவில் 170 லட்சம் பிசிஜி தடுப்பு மருந்துகளை தயாரிக்க உள்ளதாக தெரிவித்தார். கொரோனா தடுப்பு மருந்து தயாரிக்க அர சிடமிருந்து எந்த ஆணையும் வரவில்லை. அண்மையில் பிசிஜி தடுப்பு மருந்து குறித்த ஐசிஎம்ஆர்-ன் அறிக்கை அடிப்படையில் அதன் தயாரிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.

மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு பெயர் மாற்றம்

சென்னை, ஜூலை 31- ஆலந்தூர் மெட்ரோ, சென்ட்ரல் மெட்ரோ மற்றும் புறநகர் பேருந்து நிலையம் மெட்ரோ நிலையங்களின் பெயர்களை மாற்றம் செய்து தமி ழக முதலமைச்சர் எடப்பாடி கே.பழனி சாமி உத்தரவிட்டுள்ளார். அதன்படி, ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையம் “அறிஞர் அண்ணா ஆலந்தூர் மெட்ரோ” என்றும், சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையம் என்பது “புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ராமச்சந்திரன் சென்ட்ரல் மெட்ரோ” என்றும், கோயம்பேடு புற நகர் பேருந்து நிலைய மெட்ரோ ரயில்  நிலையம் “புரட்சித் தலைவி டாக்டர் ஜெ.ஜெயலலிதா புறநகர் பேருந்து நிலையம் மெட்ரோ” என்றும் பெயர் மாற்றம் அழைக்கப்படும்.

காலமானார்

சென்னை, ஜூலை 31 - தாம்பரம் பகுதியில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள்  சங்கத்தின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்த கரிபால்டி வியாழனன்று (ஜூலை 30) உடல் நலக்குறைவால் காலமானார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் உறுப்பினரான கரிபால்டி, முன்னாள் அமைச்சர் டி.கே.எம்.சின்னையாவின் மூத்த சகோதரர்ஆவார். மார்க்சிய பெரியாரிய சிந்தனையாளரான அவர், தமுஎகச நடத்திய ஜீவா நூற்றாண்டு விழா நிகழ்வின்போது, மலர்க்குழுத் தலைவராக இருந்து பணியாற்றினார். இடதுசாரி, பெரியாரிய, அம்பேத்கரிய இயக்கங்களோடு இணைந்து பணியாற்றியவர். அன்னாரது உடல் வெள்ளியன்று (ஜூலை 31) தாம்பரம் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. இறுதி நிகழ்வில் மார்க்சிஸ்ட் கட்சியின் தாம்பரம் பகுதிச் செயலாளர் க.வெ.ராதாகிருஷ்ணன், மூத்ததலைவர் ஆர்.கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

புதுச்சேரியில் 11ஆம் வகுப்பு தேர்வில் 96.87 விழுக்காடு மாணவர்கள் தேர்ச்சி

புதுச்சேரி, ஜூலை.31- புதுச்சேரியில் 11ஆம் வகுப்பு தேர்வில் 96.87 மாணவர்கள் விழுக்காடு  தேர்ச்சி பெற்றுள்ளனர். மார்ச் மாதம் நடைபெற்ற 11ஆம் வகுப்பு பொதுதேர்வில் புதுச்சேரி  மற்றும் காரைக்காலை சேர்ந்த  14,680 மாணவர்கள் தேர்வு எழுதினர்.  அதில் 14,220 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது கடந்த ஆண்டை விட 2.09  விழுக்காடு அதிகம். புதுச்சேரி பள்ளிக்கல்வி துறை சார்பில் வெளி யிட்டுள்ள செய்தி குறிப்பில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாற்றுத்திறனாளிகளை பணிக்கு அழைக்கக் கூடாது

சிதம்பரம், ஜூலை 31- தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திற னாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமை களுக்கான சங்கத்தின் மாநிலத் தலைவர் ஜான்சிராணி,  கடலூர் மாவட்டத் தலைவர் ராஜா ஆகியோர் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக பதிவாளர் ஞானதேவனை சந்தித்து மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியுள்ளதாவது: கொரோனா நோய்த் தொற்று அதிகரித்து வரும் நிலையில், தமிழ்நாடு அரசு மாற்றுத்திற னாளி பணியாளர்களுக்கு அலுவலகப் பணி களில் இருந்து விலக்கு அளித்துள்ளது. ஆனால் அண்ணாமலைப் பல்கலைக்கழ கம், ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி  மருத்துவமனையிலும் மாற்றுத் திறனாளி களுக்கு இந்த விலக்கு மறுக்கப்படுகிறது. இது அரசின் அறிவிப்புக்கு எதிரானது. எனவே  மாற்றுத்திறனாளிகளுக்கு அலுவலக பணி களில் இருந்து விலக்கு அளிக்கவேண்டும். மேலும் இதே மருத்துவக் கல்லூரி மருத்து வமனையில் பணியாற்றும் மாற்றுத்திறனாளி செவிலியர் ஜென்மராக்கினி கட்டாய பணி யின் காரணமாக கொரோனா தொற்றால்  பாதிக்கப்பட்டுள்ளார். எனவே மாற்றுத்திற னாளிகளை பணிக்கு அழைக்கக் கூடாது. மேலும் அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் அனைத்து புலங்களிலும் பணி யாற்றும் மாற்றுத்திறனாளி ஆசிரியர்கள், ஆசி ரியர் அல்லாத ஊழியர்கள் அனைவருக்கும் அரசின் அறிவிப்பின் பயணப்படி  2,500 ரூபாய்  ஆண்டுக்கு ஒரு முறை வழங்கப்படுகிறது. இதனை மாற்றி மாத ஊதியத்துடன் வழங்க  வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப் பட்டுள்ளது.