சென்னை - கொழும்பு
விமான சேவை ரத்து
சென்னை,மார்ச் 16- கொழும்பில் இருந்து லங்கன் ஏர்லைன்ஸ் விமானம் தினமும் காலை 7.20 மணிக்கு புறப்பட்டு காலை 8.40 மணிக்கு சென்னைக்கு வந்தடையும். அதுபோன்று கொழும்பில் இருந்து சென்னைக்கு இயக்கப்படும் விமா னத்தில் போதிய பயணி கள் இல்லாததால் ரத்து செய்யப்படுவதாக அறி விக்கப்பட்டது.
இதேபோல், சென்னை யில் இருந்து காலை 9.40 மணியளவில் புறப்பட்டு, காலை 11 மணிக்கு கொழும்பு நகரை சென்ற டையும் லங்கன் ஏர்லைன்ஸ் விமானமும் போதிய பய ணிகள் இல்லாததால் ரத்து செய்யப்பட்டது.
இந்த 2 விமானங்களிலும் பயணம் செய்வதற்கு ஒரு சில பயணிகளே முன்பதிவு செய்திருந்தனர். இத னால் அவர்களுக்கு முன்கூட்டியே குறுந்தகவல் தெரி விக்கப்பட்டது. ஒருசில பயணிகளின் டிக்கெட்டுகள் மாற்றப்பட்டு, மாற்று விமா னங்களில் கொழும்புக்கு அனுப்பி வைக்கும் பணிகள் நடைபெற்றன என்று சென்னை விமானநிலைய அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.
பயிற்சி வகுப்பு
சென்னை,மார்ச் 16 பொதுப்பணித்துறை யில், புதியதாக நியமனம் பெற்ற 302 உதவிப் பொறியாளர்களுக்குப் பயிற்சி வகுப்பை அமைச்சர் எ.வ.வேலு துவங்கி வைத்தார். இதில் அரசு முதன்மைச் செயலாளர் சந்தரமோகன் முதன்மைத் தலைமைப் பொறியாளர் கே.பி.சத்தியமூர்த்தி, கோவை மண்டல தலைமைப் பொறியாளர் எஸ்.காசிலிங்கம், திருச்சி மண்டல தலைமைப் பொறி யாளர் எ.வள்ளுவன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.