tamilnadu

சென்னை முக்கிய செய்திகள்

மழைநீரில் மின்சாரம் பாய்ந்து 8-ஆம் வகுப்பு மாணவன் பலி

முகலிவாக்கம்,செப்.16 போரூரை அடுத்த முகலிவாக்கம் தனம்நகரை சேர்ந்தவர் செந்தில். இவரது மகன் தீனா(14). இவன் அதே பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 8ஆம்  வகுப்பு படித்து வந்தான். ஞாயிறன்று இரவு தனது நண்பனை பஸ்சில் ஏற்றி வழியனுப்பி விட்டு வீட்டுக்கு நடந்துவந்து கொண்டிருந்தான். அந்த பகுதி யில் கால்வாய் அமைக்க நகராட்சி சார்பில் பள்ளம் தோண்டப்பட்டு குண்டும் குழியு மாக உள்ளது. ஏற்கனவே அப்பகுதியில் தெருவிளக்குகளுக்கு மின் கேபிள்கள் புதைக்கப்பட்டுள்ளது. அது சரிவர மூடப்படாததால் கேபிள் வயர்கள் வெளியே தெரிகின்றன. இதற்கிடையே இரவு பெய்த மழையின் காரணமாக தேங்கிய தண்ணீரில் மின் கசிவு ஏற்பட்டிருந்தது. இந்தநிலையில் அந்த வழியாக நடந்து வந்த தீனா எதிர்பாராதவிதமாக மின்சார கசிவு ஏற்பட்ட தண்ணீரில் மிதித்து விட்டான். இதனால் தூக்கி விசப்பட்ட அவன் அதே இடத்தில் பரிதாபமாக இறந்தான். தகவல் அறிந்ததும் தீனாவின் பெற்றோரும், உறவினர்களும் ஒன்று திரண்டனர். மின்சாரம் தாக்கி இறந்த தீனாவின் உடலை தூக்கி வந்து மவுண்ட் பூந்தமல்லி சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. உடனே காவல்துறை யினரும்  வருவாய்துறை அதிகாரிகளும் அங்கு விரைந்து வந்து போராட்டம் நடத்திய வர்களுடன் சமரச பேச்சு நடத்தினர். ஆனால் சம்மந்தப்பட்ட மின்வாரிய ஊழியர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி போராட்டக்கார ர்கள் மறியலை கைவிட மறுத்தனர். எனவே தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இறுதியில் அவர்களது கோரிக்கை ஏற்கப்பட்டதை தொடர்ந்து 2 மணிநேரம் கழித்து போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. அதன்பின்னர் மாணவன் தீனாவின் உடல் பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு  மருத்துவமனைக்கு  கொண்டு செல்லப்பட்டது.

பெண்களுக்கு அடிப்படை கணிணி பயிற்சித் திட்டம்
சென்னை,செப். 16 கணினி தொழில்நுட்ப த்தை அடிப்படையாக் கொண்டு, கல்வி கற்றுத்த ரும் பேசிக் ஃபர்ஸ்ட் நிறுவனம், அடுத்த மூன்று மாதங்களில் 50,000 பெண்களுக்கு கணினி தொழில்நுட்ப பயிற்சி அளிக்க திட்டமிட்டுள்ளது. மடிக்கணினி ஒன்றை வாடகைக்கு எடுத்து குறிப்பிட்ட பகுதியில் பெண்கள் கூடி இந்த பயிற்சியை மேற்கொள்ள லாம். நாடு முழுவதும் வீட்டில் உள்ள பெண்கள், கூடுதலாக வருமானம் ஈட்ட இது உதவும் என்று  இந்த திட்டத்தை துவக்கியுள்ள பேசிக் ஃபர்ஸ்ட் நிறுவனர் ரந்தீர் குமார் கூறினார்.   இந்த திட்டத்தால் வீடுகளில் உள்ள பெண்கள் கணினி தொழில்நுட்பத்தை கற்றுக்கொள்வதால் அவர்கள் வீடுகளில் இருந்து பணிபுரிய முடியும். மேலும் தற்போதுள்ள திறமைகளையும் அவர்கள் மேம்படுத்திக்கொள்ள முடியும். இதனால் அவர்கள் பொருளாதார ரீதியாக முன்னேற வாய்ப்பளிக்கிறது இந்த திட்டம் என்று அவர் தெரிவித்தார்.  சென்னை தவிர திருச்சி, கோவை , மதுரை, சேலம்,வேலூர் போன்ற 2ஆம் நிலை மற்றும் 3ஆம் நிலை நகரங்களிலும் இந்த திட்டத்தை அறி முகப்படுத்த இருப்பதாக அவர் மேலும் கூறினார்.