tamilnadu

செங்கல்பட்டு மற்றும் மதுராந்தகம், திருவொற்றியூர் முக்கிய செய்திகள்

மாற்றுத்திறனாளிகளுக்கு சுயம்வரம் செங்கல்பட்டில் நாளை நடக்கிறது

செங்கல்பட்டு, செப். 6- மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் மாற்றுத்திறனாளின் திருமணத்துக்கு  8 கிராம் தங்கம், பட்டதாரி மாற்றுத்திறனாளி களுக்கு ரூ.50 ஆயிரம் மற்றும் பட்டதாரி அல்லாத மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.25  ஆயிரம் என திருமண உதவிகள் வழங்கப் பட்டு வருகிறது. இந்நிலையில், தமிழ்நாடு மாற்றுத்திற னுடையோர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கான சுயம்வ ரம் நிகழ்ச்சி ஞாயிறன்று(செப். 8) செங்கல்  பட்டு நகராட்சி அலுவலகம் அருகேயுள்ள சமூதாய நலக்கூடத்தில் நடைபெற உள்ளது.  இதில், திருமணம் செய்துக்கொள்ள விண்ணப்பிக்கும் மாற்றுத் திறனாளிகளுக்கு சென்னையை சேர்ந்த கீதாபவன் அறக் கட்டளை சார்பில் இலவசமாக திருமணம் செய்து வைக்கப்பட உள்ளது. இதனால், மேற்கண்ட சுயம்வரம் நிகழ்ச்சி யின் மூலம் திருமணம் செய்துகொள்ள விரும்  பும் மாற்றுத்திறனாளிகள், தங்கள் பகுதியின்  கிராம நிர்வாக அலுவலர்கள், உதவியாளர் கள், ஊராட்சி உதவியாளர்கள், அனைவ ருக்கும் கல்வி இயக்க சிறப்பு ஆசிரியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், மகளிர் திட்ட பொறுப்பாளர்கள், கிராம செவிலியர் ஆகி யோருக்கு தகவல் அளித்து, உரிய விண்ணப்பங்களுடன் கீழ் கண்ட 9884029882, 9962986168 தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு விண்ணப்பங்களை வழங்கலாம் என தமிழ்நாடு மாற்றுத்திறனுடையோர் சங்கங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து, செங்கல்பட்டு மாவட்ட மாற்  றுத்திறனாளிகள் நல அலுவலர் சிறீநாத் கூறிய தாவது:  சமூக நலத்துறை வழங்குவதுபோன்று, மாற்றுத்திறனாளிகள் நலத்துறையும் திரு மண உதவிகளை வழங்கி வருகிறது. இந்த  உதவிகளை பெற விரும்பும் மாற்றுத்திறனாளி கள், சமூக நலத்துறையில் மேற்கண்ட திரு மண உதவிகளை பெறவில்லை என சான்று களை சமர்ப்பிக்க வேண்டும். மேலும், மேற்  கண்ட அமைப்பினர் ஏற்பாடு செய்துள்ள  சுயம்வரம் நிகழ்ச்சியில் அனைவரும் பயன்பெறுவதற்காக, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் தகவல் தெரிவிக்கப் பட்டுள்ளது என்றார். 

இடுபொருட்களுக்கு மானியம்: விவசாயிகள் சங்கம் கோரிக்கை

மதுராந்தகம், செப். 6- விவசாய இடுபொருட்களுக்கு மானியம் வழங்கவேண்டும் என்று  தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. சங்கத்தின் மதுராந்தகம் வட்ட சிறப்புப் பேரவை வியாழனன்று மதுராந்தகத்தில்  குமரேசன்  தலைமையில் நடைபெற்றது. வட்டச் செயலாளர் வி.பொன்னுசாமி வேலை அறிக்கையை சமர்ப்பித்தார். இப்பேரவையில் மதுராந்தகம் ஏரி உள்ளிட்ட வட்டத்திற்குட்பட்ட ஏரிகளை உடனடியாக தூர் வார நடவடிக்கை எடுத்திட வேண்டும், விவசாயக் கடன்களை ரத்து செய்திட வேண்டும், அரசு புறம்போக்கு நிலத்தில் வசிக்கும் அனைவருக்கும் குடிமனை பட்டா வழங்க வேண்டும், படாளம் கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு கரும்பு வழங்கிய விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய பாக்கித் தொகையை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன தீர்மானங்களை விளக்கி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டத் தலைவர் ஜி.மோகனன், மாவட்ட துணைத் தலைவர் என்.சாரங்கன் ஆகியோர் பேசினர். சங்கத்தின் மதுராந்தகம் வட்ட புதிய நிர்வாகிகளாக ஜெகநாதன் (தலைவர்),எஸ்.ராஜா ( செயலாளர் ) ,  தனசேகரன் (பொருளாளர்) உள்ளிட்ட 17 பேர் கொண்ட புதிய வட்டக்குழு தேர்வு செய்யப்பட்டது. 

எண்ணூரில் திடீர் மின் வெட்டு - நள்ளிரவில் மறியல் 

திருவொற்றியூர், செப். 6- சென்னை ,எண்ணூர்,  தாழங்குப்பம், நெட்டு குப்பம், சின்னகுப்பம்,  உலக நாதபுரம், சத்தியவாணி  முத்து நகர் போன்ற பகுதிகளில், வியாழனன்று மாலை  6 மணிக்கு, திடீரென மின்சாரம் தடைபட்டது.  இதனால்,  அப்பகுதி மக்கள் அவதிப்பட்டு வந்தனர். காலாண்டுத்  தேர்வுக்கு படிக்க முடியாமல், மாணவ, மாணவி களும் சிரமப்பட்டனர். மேலும், இரவு 10 மணி ஆகியும் மின்சாரம் வர வில்லை, இதனால், ஆத்திரமடைந்த  அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள், சுமார் 300 க்கு மேற்பட்டோர் ஒன்று திரண்டு, ராமநாதபுரம், கத்திவாக்கம் நெடுஞ்சாலையில் அமர்ந்து, மின் வாரிய அதி காரியை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.  தக வல் கிடைத்து போலீசார் விரைந்து வந்து, சமரச பேச்சில் ஈடுபட்டு, இது தொடர்பாக, மின் வாரிய அதி காரிகளுக்கு தெரிவித்தனர். பின்னர்,  உயர்  மின்ன ழுத்த வயர் மற்றும் பில்லரில் ஏற்பட்ட பழுதை சரி செய்தனர். அதன் பின்னர் அப்பகுதி முழுவதும் மின்சா ரம் வந்தது இதையடுத்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.