tamilnadu

img

வீட்டு வாடகை வசூலிக்க தடை கோரிய வழக்கு தள்ளுபடி

சென்னை:
கொரோனா தாக்கத்தால் வீட்டு வாடகை வசூலிக்க தடைவிதிக்க அரசாணை பிறப் பிக்க கோரிய வழக்கை மனுதாரர் திரும்பப் பெற்றதால், அந்த வழக்கை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.ஊரடங்கு தொடர்ந்து நீட்டிக்கப் பட்டுள்ளதால், மூன்று மாதத்திற்கு வாடகை வசூலிக்கக் கூடாது என்று வீடு, நில உரிமையாளர்களுக்கு உத்தரவிட வேண்டும் என மனுதாரர் கோரியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஆர்.ஹேமலதா அமர்வில்  விசாரணைக்கு வந்தபோது, இதேபோல தொடரப்பட்ட வழக்கை தில்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளதாகவும், நீதிமன்றத்தில் வாடகைதாரரோ வீட்டு உரிமையாளரோ யாரும் வழக் குத் தொடரவில்லை என்று நீதிபதிகள் குறிப் பிட்டனர். இந்த வழக்கை மனுதாரருக்கு அபராதத்துடன் தள்ளுபடி செய்ய உள்ளதாகவும் தெரிவித்திருந்தனர்.இந்நிலையில் வழக்கை வாபஸ் பெற மனுதாரருக்கு அனுமதி அளித்த நீதிபதிகள், வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

;