தமிழகத்தில் 8 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. இந்நிலையில் குமரி கடல் பகுதியில் நிலவும் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அடுத்த 24 மணி நேரத்தில் நீலகிரி, தேனி, இராமநாதபுரம், திண்டுக்கல், திருப்பூர், நெல்லை குமரி உள்ளிட்ட 8 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் நீலகிரி மற்றும் தேனி ஆகிய இரண்டு மாவட்டங்களில் அதி கனமழைக்கு வாய்ப்புள்ளது என்றும் வானிலை ஆய்வு மையம் சுட்டிக்காட்டி உள்ளது-