சென்னை,நவ.9- மத்திய கிழக்கு அரபிக் கடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவிழந்தது. மேலும் குமரிக்கடல் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி ஒன்றும் நிலவுகிறது.
இதனால் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இரண்டு நாட்களுக்கு அநேக இடங்களில் இடி மின்னலுடன் லேசான மழை பெய்யக்கூடும். சென்னை யில் வானம் மேகமூட்டத் துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி யுடன் மழை விட்டு விட்டு பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
15 விழுக்காடு குறைவு
இந்த ஆண்டு தென் மேற்கு பருவமழை தாமத மாக தொடங்கி தாமத மாகவே நிறைவடைந்தது. இதன் காரணமாக வடகிழக்கு பருவ மழையும் தாமதமாக தொடங்கியது. அக்டோபர் 1 முதல் நவ.9 வரை வழக்கமாக பெய்யும் மழை அளவை விட 15 விழுக் காடு குறைவாக மழை பதிவாகி உள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதாவது, வழக்கமாக அக்டோபர் 1 முதல் 9 வரை 243.6மிமீ மழை பதிவாகும் நிலையில் தற்போது 206.4 மிமீ மழை மட்டுமே பெய்து உள்ளது. வடகிழக்கு பருவ மழை தாமதமாக தொடங்கி யிருந்தாலும் ஆரம்ப காலத்தில் மழை பெரிய அளவில் பெய்யவில்லை என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கி றது.