tamilnadu

img

பணியிடங்களில் பாலியல் புகார் குழுக்கள்: மாதர் சங்கம் கோரிக்கை

சென்னை, பிப். 9 - பணியிடங்களில் பாலியல் புகார் குழு (விசாகா குழு) அமைப்பதை அரசு உறுதிப்படுத்த வேண்டும் என்று அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஏ.ராதிகா வலியுறுத்தியுள்ளார். தென் மாவட்டங்களில் பாலியல் புகார்கள் அதிகம் எழுந்ததையடுத்து அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் மதுரை மாநகர், மதுரை  புறநகர், திண்டுக்கல், சிவகங்கை, விருதுநகர் ஆகிய 5 மாவட்டங்களில் 60 நிறுவனங்களில் ஆய்வு மேற் கொண்டது.

அந்த ஆய்வு அறிக் கையை வெள்ளியன்று (பிப்.9) சென்னையில் வெளியிட்டு ஏ.ராதிகா செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஆய்வு மேற்கொண்ட 60 நிறுவனங்களில் 16இல் மட்டுமே  பாலியல் புகார் குழு உள்ளது. 39  நிறுவனங்களில் புகார் குழு இல்லை.  5 நிறுவனங்கள் தகவல் தர மறுத்து விட்டது.

அதாவது, அங்கும் புகார் குழுக்கள் அமைக்கப்படவில்லை. 8 நிறுவனங்களில் பாலியல் துன்புறுத்தல் நடைபெறுவதாக, புகார் கூறும் பெண்கள் மீது அவதூறு  பரப்புவது, பணிச்சுமையை அதிகரிப் பது, பணியிட மாற்றம் செய்வது போன்ற பழிவாங்கல்கள் நடைபெறு வதும் ஆய்வில் தெரிய வந்துள்ளது.

அரசு மருத்துவமனையிலும்...

6 இடங்களில் புகாரை விசாரித்து ஒழுங்கு நடவடிக்கை எடுத்துள்ளனர். புகார் குழு கூட்டங்களை குறிப்பிட்ட  கால இடைவெளியில் முறையாக நடத்தாதது, புகாரை விசாரித்த இடங்களில் விசாரணை அறிக்கை களை குறித்த காலத்தில் சமர்ப்பிக்காத  நிலையும் உள்ளது.

அரசு மருத்துவமனையில் பாலியல் துன்புறுத்தல் நடைபெற்ற புகாரை கூட விசாரித்து நடவடிக்கை எடுக்காத நிலை நிலவுகிறது. பிரபல மான நிறுவனங்களில் தொடர்ந்து பாலியல் புகார்கள் வந்து கொண்டே  இருக்கின்றன. புகார்க் குழு அமைக் கப்பட்டுள்ளதை கூட பல நிறுவனங் கள் ஊழியர்களுக்கு அறிவிப்பு பலகை வாயிலாக தெரிவிக்காமல்  உள்ளன.

10 பேர் பணிபுரியும் இடங்களில் புகார்க் குழுக்களை அமைக்க வேண்டும். ஆனால் 90 விழுக்காடு நிறுவனங்களில் புகார் குழுக்களை அமைக்காமல் உள்ளனர். இத்தகைய நிறுவனங்களுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்க சட்டம் வழிவகை செய்துள்ளது.

எனவே, நிறுவனங்களில் புகார்க் குழுக்கள் அமைப்பதை தமிழ்நாடு அரசு உறுதிப்படுத்த வேண்டும். மாவட்ட ஆட்சியர் தலைமையில் கண்காணிப்பு குழு அமைத்து புகார்  குழுக்களை கண்காணிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தலைவர் இல்லாத ஆணையம்

செய்தியாளர்களின் கேள்விக ளுக்கு பதிலளித்த அவர், “பள்ளி, கல்லூரி மாணவர்கள் மீதான வன்முறை அதிகரித்துள்ளது. குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் என்று ஒன்று தமிழகத்தில் உள்ளது.  அந்த ஆணையத்திற்கு தலைவரே இல்லை. தலைவரை நியமிக்க கோரி  மனு கொடுத்து வலியுறுத்தி வருகி றோம். எனவே, அரசு ஆணையத் திற்கு தலைவரை நியமித்து குழந்தை கள் மீதான வன்முறை புகார்களில் தலையீடு செய்ய வேண்டும்” என்றார்.

“5 மாவட்டங்களில் செய்த ஆய்வு  அறிக்கையை அரசிடம் சமர்ப்பிக்க உள்ளோம். இதனை தொடர்ந்து பிற மாவட்டங்களிலும் ஆய்வு செய்து அறிக்கையை வெளியிடுவோம்” என்றும் கூறினார்.

பாஜகவில் பெண்களின் பாதுகாப்பு?
“அரசியல் கட்சிகள் உள்புகார்  குழுக்களை அமைக்க தேவை யில்லை என்று கேரள உயர்நீதிமன்றம்  வழக்கு ஒன்றில் தீர்ப்பளித்தது. இருப்பினும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  கட்சி புகார் குழுவை அமைத்துள்ளது. பாஜகவில் பெண்களுக்கு எந்த அளவுக்கு பாதுகாப்பு உள்ளது என்ற  லட்சணம் அனைவருக்கும் தெரியும். எனவே, பாஜகவிலும் உள்புகார்க் குழுவை அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை அமைக்க வேண்டும். ஏற்கனவே குழு அமைத் திருந்தால் இந்தக் குழு, பெண்களின்  பாதுகாப்பை உறுதி செய்ய வேண் டும்” என்றும் ராதிகா கூறினார்.

இந்த நிகழ்வின்போது அகில இந்திய செயலாளர் பி.சுகந்தி, மாநிலத்  தலைவர் எஸ்.வாலண்டினா, பொரு ளாளர் பிரமிளா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.