இந்திய மாணவர் சங்கம், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க மதுரவாயல் பகுதி சார்பில் நடத்தப்படும் பாரதியார் சிலம்பம் பயிற்சி மையத்தின் பயிற்சி முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி ஞாயிறன்று (செப். 15) நடைபெற்றது. சிலம்பம் ஆசிரியர் ரா.ஷங்கர் பாபு தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மாணவர் சங்க முன்னாள் மாநிலச் செயலாளர் ஜி.செல்வா, தென்சென்னை மாவட்டச் செயலாளர் தீ.சந்துரு, தமுஎகச மாநில செயற்குழு உறுப்பினர் மயிலை பாலு, போரூர் கிளைத் தலைவர் ஆர்.திருஞானம், தேசிய அளவில் சிலம்பத்தில் தங்கப்பதக்கம் வென்ற பி.மைதிலி பிச்சாண்டி, மதுரவாயல் காவல்நிலைய ஆய்வாளர் என்.ரவீந்திரன், வானகரம் ஊராட்சி முன்னாள் தலைவர் என்.வி.சீனிவாசன், ஜெ.பழனி உள்ளிட்டோர் கலந்து கொண்டு சான்றிதழ் மற்றும் கேடயங்களை வழங்கி பேசினர்.