tamilnadu

img

மத்திய அரசு பணி: 1,000க்கும் மேற்பட்ட வடமாநிலத்தவரின் சான்றிதழ்கள் போலி – அரசு தேர்வுகள் இயக்ககம் அதிர்ச்சி தகவல்!

மத்திய அரசு பணிகளில் சேர விண்ணப்பித்துள்ள 2,500க்கும் மேற்பட்ட வடமாநிலத்தவர்களின் மதிப்பெண் சான்றிதழ்களை ஆய்வு செய்ததில், 1,000க்கும் மேற்பட்ட சான்றிதழ்கள் போலி என அரசு தேர்வுகள் இயக்ககம் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.  

மத்திய அரசின் அஞ்சல் துறை உட்பட பல்வேறு துறைகளில் பணியாற்ற, எழுத்துத்தேர்வு இல்லாமல் மதிப்பெண் அடிப்படையில் நிரப்பப்படும் தேர்வுகளுக்கு, வடமாநிலத்தை சேர்ந்த பலர் விண்ணப்பித்துள்ளனர்.

இந்நிலையில் மத்திய அரசு பணிகளில் சேர விண்ணப்பித்துள்ள 2,500க்கும் மேற்பட்ட வடமாநிலத்தவரின் மதிப்பெண் சான்றிதழ்களை ஆய்வு செய்ததில் 1,000க்கும் மேற்பட்ட சான்றிதழ்கள் போலி என்பதை அரசு தேர்வுகள் இயக்ககம் அதிர்ச்சி தகவல் தெரிவித்துள்ளது.  

மேலும் உத்தரப் பிரதேசத்தின் தியோரியா மாவட்ட அஞ்சல் அலுவலகங்களில் பணியில் சேர விண்ணப்பித்துள்ள 500 பேரின் சான்றிதழ்கள் முழுவதும் போலி என்பதும் கண்டறியப்பட்டுள்ளது. இதனால் உத்தரப்பிரதேச மாநிலத்தில் போலிச் சான்று அச்சடிக்கப்பட்டிருக்கலாம் என தமிழக அரசு தேர்வுகள் இயக்ககம் சந்தேகப்படுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.  

ஏற்கனவே 300க்கும் மேற்பட்ட நபர்கள் போலி மதிப்பெண் சான்றிதழ் அளித்து தமிழக அஞ்சல் அலுவலகங்களில் சேர்ந்து பணிபுரிந்து வருவதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

முன்னதாக கர்நாடகாவில் தமிழ்நாடு போலி மதிப்பெண் சான்றிதழ்களை அளித்து பணியில் சேர்ந்த இரண்டு பேரை கைது செய்து, அம்மாநில காவல் துறை நடவடிக்கை எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.