சென்னை, மார்ச் 9 - மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிக ளைப் பிரிக்கக்கூடாது என்று கூட்டுறவு வங்கி ஊழியர் சம்மேளனம் கோரிக்கை விடுத்துள்ளது. இதுதொடர்பாக சம்மேளனத்தின் தலைவர் தி. தமிழரசு, பொதுச்செயலா ளர் இ.சர்வேசன் ஆகியோர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியை, சேலம், நாமக்கல் என இரு மாவட்ட வங்கிகளாக பிரித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
1991-ஆம் ஆண்டு மதுரை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மதுரை, திண்டுக்கல் என பிரிக்கப்பட்டது. இராமநாதபுரம் மாவட்ட மத்திய வங்கி யிலிருந்து விருதுநகர், சிவகங்கை மாவட்ட மத்திய வங்கிகள் உருவாக்கப் பட்டன. திருநெல்வேலி மாவட்ட வங்கி, தூத்துக்குடி, திருநெல்வேலி என பிரிக்கப்பட்டது. இந்த வங்கிகள் 30 ஆண்டுகளுக்கு பிறகு தற்போதுதான் சற்று பலமடைந்துள்ளன. இன்னும் சில வங்கிகள் பலம் இழந்தவைகளா கவே உள்ளன. இந்த நிலையில் சேலம், நாமக்கல் என மத்திய கூட்டுறவு வங்கிகள் பிரிக் கப்படுவது இந்த வங்கிகளின் செயல் பாட்டை பெரிதளவு பாதிக்கும்.
மாநில அரசு அடிப்படை கட்டமைப்புகளை உருவாக்கிட நிதி வழங்க வேண்டியி ருக்கும். சேலம் வங்கியும் 5 ஆயிரம் சதுரஅடி புதிய கட்டடத்தை கட்ட ஆகும் செலவை ஏற்க வேண்டியிருக்கும். மாவட்ட மத்திய வங்கிகளை இணைப்பதற்கான ஒரு வழிகாட்டு சுற்றறிக்கையை 2021-ஆம் ஆண்டு இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டது. மாவட்ட மத்திய வங்கிகளை மாவட்ட வாரியாக பிரிப்பதற்கு ஆலோசனை அல்லது கொள்கை அறிவிப்பை ரிசர்வ் வங்கி அல்லது நபார்டு வங்கி யோ வெளியிடவில்லை.
கிராமங்களில் செயல்பட்டு வந்த 194 கிராம வங்கிகளை 43 வங்கிகளாக இணைத்த பின்தான் கிராம வங்கிகள் வலிமையடைந்தன. பொதுத்துறையில் உள்ள பெரிய வங்கிகளை இணைக்கா மல் கிராமப்புற, கூட்டுறவு வங்கிகளை இணைத்து பலமிக்கதாக மாற்ற வேண்டும். அந்த அடிப்படையில்தான் கேரள அரசு ‘கேரள வங்கி’யை உரு வாக்கியது.
அந்த வங்கி தற்போது ஆசியாவிலேயே பெரிய பலமான கூட்டுறவு வங்கியாகத் திகழ்கிறது. எனவே, சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியை பிரித்து, சேலம், நாமக்கல் மாவட்ட வங்கிகளாக உரு வாக்குவது வங்கியை பலவீனப் படுத்தும். எனவே, இதற்காக அரசா ணையை திரும்பப்பெற வேண்டும். கூட்டுறவு வங்கிகளை சீரழிக்க முயலும் இந்த முடிவை கைவிட வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.