tamilnadu

img

வக்பு வாரிய அலுவலகத்தில் சிபிஐ சோதனை

மதுரை,

பல லட்சம் ரூபாய் லஞ்சம் பெற்றுக் கொண்டு மதுரை வக்பு வாரிய கல்லூரியில் நியமனம் நடந்துள்ளதாகவும், அந்த லஞ்சப் பணம் கல்லூரி நிர்வாக குழு உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர், வக்பு வாரிய தலைவருக்கு பகிர்ந்து அளிக்கப்பட்டிருப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இந்த முறைகேடு நடந்தது தொடர்பான புகாரை சிபிஐ விசாரிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. இதையடுத்து இந்த முறைகேடு புகார் தொடர்பாக 5 சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை மண்ணடியில் உள்ள வக்பு வாரிய அலுவலகத்தில் சிபிஐ அதிகாரிகள் இன்று சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அலுவலகத்தில் உள்ள முக்கிய ஆவணங்களை ஆய்வு செய்தனர். அங்கிருந்த ஊழியர்களிடம் விசாரணை நடத்தினர். இந்நிலையில் வக்பு வாரிய தலைவரான மக்களவை உறுப்பினர் அன்வர் ராஜா வீட்டில் சிபிஐ சோதனை நடைபெற்று வருகிறது. இவர் ராமநாதபுரம் தொகுதி எம்பி ஆவார். இந்நிலையில் வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் அவருக்கு வாய்ப்பு அளிக்க வில்லை. மேலும் அந்த தொகுதி பாஜகவிற்கு ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

;