சென்னை, மே 10- சாதி ஆதிக்க சக்தியின ரால் அவமானப்படுத்தப் பட்ட குறவர் இனத்தைச் சார்ந்த ஊராட்சி மன்ற பெண் தலைவரின் புகார் மீது நட வடிக்கை எடுக்க முனைப்பு காட்டாத மாவட்ட ஆட்சியர், காவல்துறை அதிகாரிகளின் செயலுக்கு தமிழ்நாடு குற வன் பழங்குடி மக்கள் முன்னேற்ற சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சங்கத்தின் மாநிலச் செயலாளர் ஏ.வி. சண்முகம் வெளியிட்டி ருக்கும் அறிக்கை வரு மாறு:- திருப்பூர் மாவட்டம் தாரா புரம் வட்டம் தாராபுரம் ஊராட்சி ஒன்றியத்திற் குட்பட்ட கவுண்டச்சி புதூர் ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு முதன் முறையாக போட்டியிட்டு வெற்றி பெற்ற வர் குறவர் இனத்தைச் சேர்ந்த ஆர். செல்வி. இம் மாதம் நான்காம் தேதி ஊராட்சி மன்ற அலுவலகத் தில் (கொண்டரசம்பாளை யம்) துணைத் தலைவருடன் ஊராட்சி தூய்மை பணியா ளர்களுக்கு சீருடை, சத்து மாத்திரை வழங்குவது சம்பந்தமாக ஆலோசனை யில் ஈடுபட்டுக்கொண்டி ருந்தார்.
அப்போது, 6வது வார்டு உறுப்பினர் குப்புசாமி, சீருடை கொடுப்பது பற்றி என்னிடம் ஏன் தகவல் தெரிவிக்கவில்லை என ஊராட்சி மன்றத் தலைவ ரின் சாதிப் பெயரை சொல்லி இழிவுப்படுத்தி தகாத வார்த்தைகளால் பேசி யுள்ளார். மிகுந்த மன உளைச்ச லுக்கும் அவமானத்திற்கும் ஆளான ஊராட்சிமன்றத் தலைவர் செல்வி, இது குறித்து மாவட்ட ஆட்சியர் மற்றும் உயர் அதிகாரிகளி டம் புகார் மனு அளித்து முறையிட்டுள்ளார். மனுவை பெற்றுக் கொண்ட ஆட்சியர் ‘கவ னிக்கிறேன்’ என்று ஒற்றை வரியில் பதில் சொல்லி அனுப்பி வைத்துள்ளார். ஆனால் எவ்வித நடவடிக்கை யும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தாராபுரம் செயலாளர் கனக ராஜ், தீண்டாமை ஒழிப்பு முன்னணி தலைவர்கள் தலையிட்டு புகார் அளித்த தன் அடிப்படையில் வேறு வழியில்லாமல் காவல்துறை யினர் முதல் தகவல் அறிக் கையை பதிவு செய்துள்ள னர்.
பாதிக்கப்பட்ட குறவரி னப் பெண் ஊராட்சி மன்றத் தலைவருக்கு உரிய நீதி கேட்டு அவருக்கு வழிகாட் டிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றியை தெரிவிக்கிறோம். பாதிக்கப்பட்ட ஊராட்சி மன்றத் தலைவர் குறவர் இனத்தைச் சேர்ந்தவர் என்பதால் நீதி கிடைத்திட ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர் குப்புசாமி மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்து உரிய தண் டனை வழங்குவதுடன் அவ ரது ஊராட்சிமன்ற உறுப்பி னர் பதவியையும் உடனடி யாக அளிக்க வேண்டும். இவ்வாறு சண்முகம் தெரிவித்திருக்கிறார்.