tamilnadu

img

இதய மருத்துவர்  இளங்கோவன் எழுதிய இதயச்சாரல் கவிதை நூல் வெளியீட்டு விழா

இதய மருத்துவர்  இளங்கோவன் எழுதிய இதயச்சாரல் கவிதை நூல் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. உலக இதய தினத்தை முன்னிட்டு இந்த நூல் வெளியிடப்பட்டது.கவிஞர் ஈரோடு தமிழன்பன்  முன்னிலையில் சென்னை உயர்நீதி மன்ற முன்னாள் நீதிபதி ஜெகதீசன் நூலை வெளியிட தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர்  சுந்தரமூர்த்தி  பெற்றுக்கொண்டார்.மருத்துவர் விஜயா ஜானகிராமன் உலக தமிழாராய்ச்சி நிறுவனத்தின் முன்னாள் இயக்குநர், ச சு ராமர் இளங்கோ, இதய மருத்துவர் சு வைத்தியநாதன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.