tamilnadu

img

தொகுதி மேம்பாட்டு நிதியை பறித்தவர் மோடி!

சென்னை, ஏப். 2 - தொகுதி மேம்பாட்டு நிதியை பறித்தவர் மோடி என்று தென்சென்னை  மக்களவைத் தொகுதி திமுக வேட் பாளர் த.சுமதி (எ) தமிழச்சி தங்க பாண்டியன் கூறினார்.

இந்தியா கூட்டணி சார்பில் போட்டி யிடும் தமிழச்சி தங்கபாண்டியன் செவ்வாயன்று (ஏப்.2) மயிலாப்பூர்  பகுதியில் வாக்கு சேகரித்தார்.  அப்போது செய்தியாளர்களிடம் அவர்  கூறியதாவது:

பிரச்சாரத்தில் எளிய மக்கள் தெருக்கள் தோறும் திரண்டு நின்று  வரவேற்கின்றனர். அரசின் திட்டங்கள்  முழுமையாக மக்களை சென்றடைந் துள்ளதன் வெளிப்பாடாக இதனை பார்க்கிறோம். தொகுதியில் எதையும் செய்யவில்லை என்று குற்றம் சாட்டு பவர்கள், கண்ணையும், காதையும் மூடிக்கொண்டு வீட்டுக்குள் உட்கார்ந்து  இருக்கிறார்கள் என்று பொருள்.

மக்களவையில்  பல கேள்விகளை எழுப்பியதோடு, மசோதாக்கள் மீதான விவாதத்தில் பேசியுள்ளேன். அவை அனைத்தும் இணையதளங்களில் உள்ளது. பெருங்குடி குப்பை கிடங்கு  அகற்றப்படும் என்று வாக்குறுதி கொடுத்தேன். அதன்படி, 90 விழுக்காடு  பயோ மைனிங் முறையில் குப்பை கிடங்கு அகற்றப்பட்டுள்ளது. பள்ளிக் கரணை சதுப்பு நிலத்திற்கு ராம்சார் தகுதி கிடைத்துள்ளது. வேளச்சேரி ஏரியை சுற்றுலாத்தலமாக மாற்று முதல் கட்ட வரைவு ஒப்புதல் தரப்பட்டுள்ளது.

2019ம் ஆண்டு மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டோம். அப்போது  ஒன்றியத்தில் பாஜகவும், மாநிலத்தில்  அதிமுகவும் ஆட்சி செய்து கொண்டி ருந்தன. இரண்டு அரசுகளும் நாங்கள் சொல்வதை செய்ய மறுத்தன. கொரோனாவை காரணம் காட்டி ஒன்றிய அரசு 3 ஆண்டுகளுக்கான தொகுதி மேம்பாட்டு நிதி 12.50 கோடி ரூபாயை பறித்துக் கொண்டது. அந்த நிதியை மீண்டும் போராடி பெற்றுள் ளோம்.

பாஜக கூட்டணியில் 5 ஆண்டுகள் இருந்த அதிமுக என்னென்ன திட்டங் களை கொண்டு வந்தார்கள்? அவர்கள்   அவிழ்த்துவிடும் பொய் மூட்டைகளில் எதுவும் செய்யவில்லை என்பதும் ஒன்றாகும்.

மாநில அரசு மேற்கொண்ட மழைநீர்  வடிகால்வாய் பணிகளின் காரணமாக மழை வெள்ளம் விரைந்து வடிந்தது.  மெட்ரோ ரயில் பணிகள் துரிதப்படுத்தப் பட்டுள்ளது. குடிசை மாற்று வாரிய வீடுகள் கட்டும் பணி துரிதமாக நடந்து  வருகிறது. இப்போது, தேர்தலுக்காக திடீரென்று கச்சத்தீவை பற்றி பேசு  கிறார்கள். தேர்தல் வந்தவுடன் தமிழை பற்றி அதிகம் கவலைப்படுகிறார். எல்லாம் தேர்தல் நேர நாடகம்.
தமிழகத்தை வஞ்சிக்காதே
மீனவர்கள் பிரச்சனை பற்றி நாடாளுமன்றத்தில் பேசும்போது, குஜராத்தில் மீனவர்கள் பாதிக்கப் பட்டால் இந்திய மீனவர்களாக கருதும் ஒன்றிய அரசு, ராமநாதபுரம், ராமேஸ்வரம் மீனவர்கள் பாதிக்கப் பட்டால் அவர்கள் மட்டும் தமிழக மீனவர்களா? என்று கேட்டுள்ளேன். மீனவர்கள் பிரச்சனை குறித்து டி.ஆர்.பாலு பேசியிருக்கிறார். முதலமைச்சர் பலமுறை ஒன்றிய அரசுக்கு கடிதம்  எழுதியுள்ளார் ஆனால், ஜமுக்காளத் தில் வடிக்கட்டிய பொய்யை வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய் சங்கர் கூறுகிறார். இந்திய நிலப்பகுதி களை சீன ஆக்கிரமித்துள்ளதைப்பற்றி பேசாமல் கச்சத்தீவு பற்றி பாஜக பேசுவது தேர்தல் உத்தி.

இவ்வாறு அவர் பேசினார்.
இந்த வாக்கு சேகரிப்பின் போது திமுக சென்னை தென்மேற்கு மாவட்டச்  செயலாளர் த.வேலு எம்எல்ஏ, பகுதிச் செயலாளர் எஸ்.முரளி, சிபிஎம்  தென்சென்னை மாவட்டச் செயற்குழு உறுப்பினர் எஸ்.குமார், எம்.சரஸ்வதி எம்.சி., உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினர்  பெருந்திரளாக கலந்து கொண்டனர்.