“ஜெயலலிதா மறைவுக்குப் பின்னால் நிறையச் சதி நடைபெற்றது. அதற்குக் காரணம் பாஜக தான். ஆனால், அவர்களோடு இன்று டிடிவி தினகரன் கூட்டணி வைத்துள்ளார். பாஜகவுக்கு தேர்தலில் போட்டியிடக் கூட ஆள் கிடைக்கவில்லை. அதனால் தான், ஆளுநராக (தமிழிசை) இருந்தவரையும், ஒன்றிய அமைச்சராக (எல்.முருகன்) இருப்பவரையும், எம்எல்ஏ-வாக (நயினார் நாகேந்திரன்) இருப்பவரையும் பாஜக நிறுத்தியுள்ளது” என்று அதிமுக பேச்சாளரும் நடிகையுமான காயத்ரி ரகுராம் பேசியுள்ளார்.