tamilnadu

img

தமிழ்நாட்டில் 3 மருத்துவக் கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து!

தமிழ்நாட்டில் தருமபுரி, ஸ்டான்லி, திருச்சி ஆகிய 3 அரசு மருத்துவக் கல்லூரிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்து தேசிய இளநிலை மருத்துவ கல்வி வாரியம் உத்தரவு
பயோ மெட்ரிக் ,சிசிடிவி போன்ற கட்டமைப்பு வசதிகளில் குறைபாடு இருப்பதாகக் காரணம் காட்டி ஸ்டான்லி அரசு மருத்துவக்கல்லூரி, திருச்சி, தர்மபுரி இளநிலை மருத்துவ படிப்புக்கான அங்கீகாரத்தைத் தேசிய இளநிலை மருத்துவ கல்வி வாரியம் உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசும்போது;
தேசிய மருத்துவ ஆணையம் சிறிய குறைகளான CCTV கேமராக்கள் இந்த மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் இல்லை என்ற குறைகள் சொல்லியிருக்கிறார்கள். இந்தக் குறைகளையும், பழுதடைந்துள்ள CCTV கேமராக்களையும் விரைவில் சரிசெய்து கொடுத்துவிடுவோம். 
அரசியல் ஆதாயத்துக்காகத் தமிழகத்தில் உள்ள மருத்துவக் கட்டமைப்புகளைக் குறை சொல்வது போன்ற செயல்களைத் தேசிய மருத்துவ ஆணையம் தவிர்த்துக் கொள்வது நல்லது.
சிறிய குறைகளுக்காக அங்கீகாரம் ரத்து போன்ற பெரிய வார்த்தைகளைச் சொல்வது என்பது இந்த மாநிலத்தின் மீது அவர்கள் காட்டுகின்ற பாகுபாட்டை வெட்ட வெளிச்சமாக ஆக்கியிருக்கிறது. மத்திய மாநில அரசின் உறவுகளுக்கு எதிராகவும், மாநில அரசின் உரிமைகளுக்கு எதிராகவும் பேசுவது அவர்களுக்கே பாதிப்பை ஏற்படுத்தும் என்பது கடந்த காலங்களில் நடந்த நிகழ்வுகள் உறுதிப்படுத்தியுள்ளன. எனவே சற்று பொறுமையாக இருப்பது நல்லது என அவர் கூறியுள்ளார்