tamilnadu

கால்டுவெல்லின் நூல் போலியானதாம்: ஆளுநர் ரவி உளறல்

சென்னை, மார்ச் 4 - கால்டுவெல்லின் திராவிட மொழி நூல் போலியா னது என்று தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி தெரி வித்துள்ளார்.

சென்னை கிண்டி ஆளுநர் மாளிகையில், அய்யா  வைகுண்டர் அவதார தினத்தின் 192-வது பிறந்த நாள்  என்ற பெயரில், ஆளுநர் ரவி அவராகவே நிகழ்ச்சி  ஒன்றை ஏற்பாடு செய்திருந்தார். ‘ஸ்ரீ மகாவிஷ்ணு வின் அவதாரம் ஸ்ரீ வைகுண்ட சுவாமி அருளிய சனா தன வரலாறு’ என்ற புத்தகத்தையும் அதில் வெளியிட்டார்.

அதைத்தொடர்ந்து பேசிய ஆர்.என். ரவி, “திரா விட மொழிகள் குறித்து கால்டுவெல் எழுதிய நூல்  போலியானது. ஜி.யூ. போப் மற்றும் கால்டுவெல்  போன்றோர் பள்ளிப் படிப்பைக்கூட முடிக்காத வர்கள். மக்களை கிறிஸ்துவ மதத்திற்கு மாற்று வதற்காகவே ஜி.யூ. போப் மற்றும் கால்டுவெல் இந்தியாவிற்கு வந்தனர்” என வழக்கம்போல உளறிக் கொட்டினார்.

மேலும், தனக்கு இயேசுவையும், பைபிளையும் பிடிக்கும் என்றும், ஆங்கிலேயர்கள் தர்மத்தை ஒழிக்கும் பணியில் ஈடுபட்டதாகவும் தனது அறி யாமையை வெளிச்சம் போட்டுக் கொண்டார்.