கால்டுவெல் 210வது பிறந்தநாள்
தமிழ்நாடு அரசின் சார்பில் திராவிட மொழிகளில் ‘ஒப்பியல் அறிஞர் இராபர்ட் கால்டுவெல்’ 210-வது பிறந்த நாளையொட்டி, சென்னை மெரினா கடற்கரை, காமராஜர் சாலையில் அமைந்துள்ள அவரது சிலைக்கு அருகில் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள படத்திற்கு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலாளர் முனைவர் இல.சுப்பிரமணியன், செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குநர் மரு.இரா.வைத்திநாதன், தமிழ் வளர்ச்சித்துறை இயக்குநர் முனைவர் ந.அருள் ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
அயனவரம் நேரு கல்யாண மண்டபம் அருகில் பொன்னுவேல் புரம் 2ஆவது தெருவில் வசிக்கும் லோகேஷ் என்பவர் அயனவரம் மயிலப்பன் தெரு கார்னரில் பணப் பையை விட்டுச் சென்றார். அதை கண்டெடுத்த திருவிக நகர் 74ஆவது வட்டத்தில் வசிக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் ராமச்சந்திரன், வினோத் ஆகியோர் லோகேஷிடம் ஒப்படைத்தனர். பகுதிச் செயலாளர் வி.செல்வராஜ் உடனிருந்தார்.