சென்னை, ஜன. 23 - தமிழ்நாடு மாநில அமைச்சரவைக் கூட்டம், முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில், செவ்வாய்க் கிழமையன்று (ஜன.23) சென்னையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தொழில்துறை, சமூகநலத் துறை மற்றும் கலால் துறை சார்பில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. குறிப்பாக, சமூக நலத் துறையைப் பொறுத்தவரை, ஏற்கெனவே மாநில மகளிர் வரைவுக் கொள்கை வெளி யிடப்பட்டிருந்தது. அதற்கு அமைச்சரவைக் கூட்டத் தில் ஒப்புதல் அளிக்கப் பட்டுள்ளது.
பெண்கள் புகார் அளித் தால் 24 மணி நேரத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட வேண்டும்; பொது மற்றும் தனியார் நிறுவனங்களில் பணி யாற்றும் பெண்களுக்குத் தலைமைப் பொறுப்புகளில் 50 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும்; அரசியலுக்கு வர விரும்பும் பெண்களுக்கு 6 மாத கால பயிற்சி வழங்குவது உள்ளிட்ட முக்கிய அம்சங் களைக் கொண்டதே மாநில மகளிர் கொள்கையாகும். இந்தக் கொள்கையை தமிழ் நாடு முதல்வர் மு.க. ஸ்டா லின் அடுத்த மாதம் வெளி யிட உள்ளார்.
இந்நிலை யில், மாநில மகளிர் கொள் கைக்கு அமைச்சரவையின் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. கலால் துறை சார்ந்த முக்கிய முடிவுகளும் இந்த அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ளன. டாஸ்மாக் கடைகளின் எண் ணிக்கையைக் குறைத்தல், டாஸ்மாக் மதுபானங்கள் மீதான வரியை உயர்த்து தல் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப் பட்டுள்ளது.
அடுத்த மாதம் நடை பெறவுள்ள சட்டப்பேரவைக் கூட்டத்தொடருக்கு ஆயத்த மாவது, ஆளுநர் உரையில் இடம்பெற வேண்டிய முக்கிய அம்சங்கள் மற்றும் புதிய திட்டங்கள் குறித்து, இந்தக் கூட்டத்தில் விவாதிக் கப்பட்டதாக கூறப்படுகிறது. உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் ரூ. 6 லட்சம் கோடிக்கு அதிகமான முத லீடுகள் ஈர்க்கப்பட்ட நிலை யில், தொழில் துறையின் சார்பில், பல்வேறு புதிய நிறு வனங்களுக்கான அனு மதிகள் வழங்கப்பட்டன. மேலும், தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் அடுத்த மாதம் வெளி நாடு செல்கிறார். இந்த வெளிநாட்டு பய ணத்துக்கும் அமைச்சரவையில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.