சென்னை,மார்ச் 7 சர்வதேச மகளிர் தினம் மார்ச் 8-ந்தேதி கொண்டாட ப்படுகிறது. இதையொட்டி தெற்கு ரயில்வே சென்னை கோட்டம் சார்பில் 2 புறநகர் மின்சார ரயில்களை பெண்கள் இயக்கினர். சர்வதேச மகளிர் தினம் மார்ச் 8-ந்தேதி கொண்டாடப் படுகிறது. இதையொட்டி தெற்கு ரயில்வே சென்னை கோட்டம் சார்பில் 2 புறநகர் மின்சார ரயில்களை பெண்கள் இயக்கினர். மகளிரை போற்றும் விதமாக இந்த ஏற்பாடு செய்யப்பட் டது. சென்னை சென்ட்ரலில் இருந்து காலை 9.15 மணிக்கு திருவள்ளூருக்கு புறப்பட்ட மின்சார ரயிலை பெண் என்ஜின் ஓட்டுநர் ஓட்டிச் சென்றார். இதனை பார்த்த பயணிகள் கை தட்டி உற்சாகப்படுத்தினர். பாராட்டுகளையும் தெரி வித்தனர். சென்ட்ரல் மூர்மார்க்கெட்டில் இருந்து ரயில் புறப்பட்டபோது பிளாட் பாரரத்தில் நின்ற பயணிகள் ஆரவாரம் செய்தனர். அந்த ரெயில் திருவள்ளூ ரில் இருந்து 10.50 மணிக்கு புறப்பட்டு சென்ட்ரலுக்கு வந்தடைந்தது. இந்த ரயிலில் டிக்கெட் பரிசோத கர், போலீஸ் பாதுகாப்பு, சுகாதாரம், அனைத்தையும் பெண்களே மேற்கொண்ட னர்.இந்த ரயில் ஒவ்வொரு நிலையத்திற்கு செல்லும் போதும் அங்கு பெண் ஊழியர்களே சிக்னல் மூலம் வரவேற்றனர். நாளை ஞாயிற்றுக்கிழமை பொது வான விடுமுறை நாளாக இருப்பதால் இன்று மகளிர் மூலம் ரயில் இயக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.