சென்னை, ஆக. 22- சென்னை ராயபுரத்தில் மக்கள் அதிகம் கூடும் தாண்டவராயன் தெருவில் கடந்த 7 ஆண்டுகளாக தனி யாருக்கு சொந்தமான கட்டி டத்தில் டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. இந்த கடையில் மது அருந்துபவர்களில் சிலர் சாலையிலேயே விழுந்து கிடக்கிறார்கள். இதனால் அந்த வழியே செல்ல பெண்கள் அச்சப்படு கின்றனர். மேலும், இந்த மதுக்கடையால் அமராஞ்சிபு ரம், புதுஅமராஞ்சிபுரம், முத்தமிழ்நகர், தண்டை யார்பேட்டை மார்கெட், சூரிய நாராயணன் தெரு ஆகிய பகுதி மக்களும் துயரத்திற்கு ஆளாகிவரு கின்றனர். இதனைத் தொடர்ந்து ஜனநாயக மாதர் சங்கம், வாலிபர் சங்கத்தினர் பொது மக்களிடம் கையெழுத்து பெற்று மாவட்ட ஆட்சியரிடம் அளித்தனர். பின்னர், அந்த கட்டிடத்தின் உரிமையாளர் டாஸ்மாக் கடைக்கு அனு மதிக்க முடியாது என்று கூறியதோடும், மக்கள் போராட்டத்திற்கு ஆதர வளித்துள்ளார்.ஆனால், டாஸ்மாக் அதிகாரிகள் கடையை திறக்க வேண்டும் என ஊழியர்களுக்கு நிர்பந்தம் கொடுப்பதாக கூறப்படுகிறது. இப்பிரச்சனை குறித்து திங்களன்று (ஆக.26) மாவட்ட ஆட்சியரை மீண்டும் சந்திக்க உள்ள தாக மாதர் சங்க ராயபுரம் பகுதிச் செயலாளர் எஸ்.பவானி தெரிவித்தார்.