tamilnadu

ரூ.2 லட்சம் வரை ரொக்கம் எடுத்துச் செல்ல வணிகர்களை அனுமதித்திடுக : சிபிஎம்

சென்னை, ஏப். 3 - வணிகர்கள் ரூ. 2 லட்சம் வரை ரொக்கம்  எடுத்துச் செல்வதற்கு, தேர்தல் ஆணை யம் விரைந்து செயல்பட்டு அனுமதி அளிக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள் ளது. இதுதொடர்பாக, மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் தனது அறிக்கையில் கூறியிருப்பதாவது:

நடத்தை விதிகளால்  வணிகர்கள் அவதி
தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால் மக்கள் வெளியே செல்லும் போது ஆவணங்களின்றி ரூ. 50 ஆயிரத்திற்கும் மேல் பணம் எடுத்துச் செல்லக் கூடாது என்று தேர்தல் ஆணை யம் வரம்பு நிர்ணயித்துள்ளது. 

இந்த நடைமுறையால் வணிகர்கள், சிறு-குறு தொழில் முனைவோர்கள், விவ சாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள னர். இப்பகுதியினருடைய சிறு மூல தனங்கள் முடக்கப்படுவதால் தொழில், வர்த்தகமே முடக்கப்பட்டு பெரும் நஷ்டத்தை சந்திக்க வேண்டியுள்ளது. இதன் காரணமாக இவர்கள் தேர்தல் நடத்தை விதிகள் முடியும் வரை வாழ்வா தாரம் இழக்கும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ள னர். தமிழகத்தில் இவ்வாறாக ஆயி ரக்கணக்கான வணிகர்கள் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.

பணத்தை திரும்பப்பெற  பெரும் அலைக்கழிப்பு
குறிப்பாக, வணிகர்கள், காய்கறி வியாபாரிகள், சிறு கடை நடத்துவோர், கால்நடை வியாபாரிகள், சிறு-குறு தொழில் முனைவோர் உள்ளிட்ட பகுதி மக்கள் அன்றாடப் பணப் பரிமாற்றம் மூலம் தொழில் நடத்துபவர்கள், தேர்தல் ஆணைய அறிவிப்பினால், பணத்தை கொண்டு செல்லும் போது எந்தவித ஆவ ணங்களையும் கொண்டு செல்ல வாய்ப்பில்லாதவர்களாக உள்ளனர். இவர்களின் பணம் உரிய ஆவணங் கள் இல்லை எனக் கூறி பறிமுதல் செய்யப் பட்டால் அதைத் திரும்ப பெறுவதற்கு பல முறை அலைக்கழிக்கப்படும் நிலையும் உள்ளது என தகவல்கள் வெளி வருகின்றன.

ஏப்.9-இல் தமிழகத்தில் போராட்டத்திற்கு அறைகூவல்
இது சம்பந்தமாக தலைமை தேர்தல் அதிகாரியை நேரில் சந்தித்து வணிகர்கள் ரூ. 2 லட்சம் வரை ரொக்கப் பணம் எடுத்துச் செல்வதற்கு அனுமதியளிக்க வலியுறுத்தி யுள்ளனர். தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை  எடுக்க வேண்டுமெனக் கோரி ஏப்ரல் 9 அன்று தமிழகம் முழுவதும் போரா ட்டத்திற்கும் அறைகூவல் விடுத்துள்ளனர்.

எனவே, தலைமைத் தேர்தல் ஆணை யர் விரைந்து தலையிட்டு வணிகர்கள் குறைந்தபட்சம் ரூ. 2 லட்சம் வரை எடுத்துச் செல்லும் வகையில் அவர்களின் கோரிக்கையை விரைந்து நிறைவேற்றிட வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது. 

இவ்வாறு அறிக்கையில் கூறப் பட்டுள்ளது.