tamilnadu

img

தமிழ்நாட்டின் புதிய சின்னம் பட்டாம்பூச்சி

 சென்னை, ஆக.29- தமிழ்நாட்டின் புதிய சின்னமாக தமிழ் மறவன் பட்டாம்பூச்சியை அறிவித்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவு அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் சின்னங்களாக திரு வில்லிபுத்தூர் கோபுரம், பனைமரம், வரை யாடு, மரகதப்புறா, செங்காந்தள் மலர், பலாப்பழம், பரதநாட்டியம், கபடி ஆகி யவை உள்ளன. அந்த வகையில் தமிழ் மறவன் பட்டாம் பூச்சி இனத்தையும் சின்ன மாக அறிவிக்க முதன்மை தலைமை வனப்  பாதுகாவலர் மற்றும் தலைமை வன உயி ரின பாதுகாவலர் ஆகியோர் தமிழக அர சுக்கு பரிந்துரை செய்தனர். இதையடுத்து தமிழ்மறவன் பட்டாம் பூச்சி இனத்தை தமிழ்நாட்டின் சின்னமாக அறிவித்து சுற்றுச்சூழல் மற்றும் வனத் துறை செயலாளர் ஷம்பு கல்லோலிகர் உத்தரவிட்டார். இந்த உத்தரவு தற்போது அரசிதழிலும் வெளியிடப்பட்டுள்ளது.