tamilnadu

தென் மாவட்டங்களுக்கு பேருந்து சேவை

சென்னை, ஜன.30- வடசென்னை பகுதி மக்களின் வசதிக்கா கவே விழுப்புரம் கோட்டத்தை சேர்ந்த 160  தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பேருந் துகள் மாதவரம் பேருந்து நிலையத்தில் லிருந்து இயக்கப்பட உள்ளதாக போக்கு வரத்துக் கழக அதிகாரிகள் தெரிவித்திருந்த னர்.

இந்நிலையில், மாதவரத்திலிருந்து பேருந்து சேவையை அமைச்சர் எஸ்.எஸ்.  சிவசங்கர் செவ்வாயன்று (ஜன.30) தொடங்கி  வைத்தார். இதையடுத்து அவர் செய்தி யாளர்களிடம் கூறுகையில், “கிளாம்பாக்கம்  பேருந்து நிலையம் ஜன.30 முதல் முழுமை யாக பயன்பாட்டுக்கு வந்துள்ளது. கோயம்பேட்டில் இயக்கப்பட்ட தென்  மாவட்ட பேருந்துகள் இனி கிளாம்பாக்கத் திலிருந்து இயக்கப்படும்”என்றார். வடசென்னை மக்களின் சிரமத்தை தவிர்க்க மாதவரத்திலிருந்து பல்வேறு மாவட்டங்களில் பேருந்துகள் இயக்கப் படுகிறது.

மாதவரத்திலிருந்து பல்வேறு வழித்தடங்களில் 160 பேருந்துகள் இயக்கப்படும். 80 விழுக்காடு பேருந்துகள் கிளாம்பாக்கத்தில், 20 விழுக்காடு பேருந்து கள் மாதவரத்தில் இருந்து இயக்கப்படும். 30 நிமிடங்கள் முதல் 1 மணி நேர கால இடை வெளியில் மாதவரத்திலிருந்து பேருந்துகள் இயக்கப்படும் என்றும் இந்த பேருந்துகள் ரெட்டேரி, அம்பத்தூர், மதுரவாயல் புற வழிச் சாலையில் மார்க்கமாக செல்லும் என்றும் அவர் தெரிவித்தார்.

கிளாம்பாக்கத்தில்  நடைமேடை விவரம்
இந்த நிலையில், கிளாம்பாக்கம் பேருந்து  நிலையத்தில் பேருந்துகள் நிறுத்தப்படும் நடைமேடை எண் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி கன்னியாகுமரி, நாகர்கோவில், நெல்லை செங்கோட்டை பேருந்துகள் நடைமேடை எண் 1-ல் இருந்து புறப்படும்.  ராமேஸ்வரம் பேருந்துகள் 3, கடலூர் பேருந்துகள் 9, கரூர் பேருந்துகள் 4 மற்றும் 6 ஆவது நடைமேடைகள் நிறுத்தப்படும். திருச்சி, குமுளி, கும்பகோணம் செல்லும் அரசு பேருந்துகள் நடைமேடை எண் 4 இல்  நிறுத்தப்படும்.

 கள்ளக்குறிச்சி 8, கன்னியாகுமரி 1 மற்றும் 2, கும்பகோணம் 4, கோவை பேருந்து கள் 6 வது நடைமேடையில் நிறுத்தப்படும்.

கோவை, திருப்பூர், கரூர் பேருந்துகள் நடைமேடை எண் 6 இல் நிறுத்தப்படும்.

அரியலூருக்கு இயக்கப்படும் பேருந்து கள் 5 மற்றும் 8 ஆகிய நடைமேடையில் நிறுத்தப்படும்.

சிதம்பரம் 9, செங்கோட்டை 1, சிவகாசி 2, சேலம் 6, தஞ்சாவூர் பேருந்து கள் 4 ம் எண் நடைமேடையில் நிறுத்தப் படும்.  திண்டுக்கல் 4, திருச்சி 4, திருச்செந்தூர் 1, 2, நெல்லை பேருந்துகள் 1, 2ஆம் எண் நடைமேடையில் நிறுத்தம். திருவண்ணா மலை 7, திருவாரூர் 5, தேனி 4, நாகர்கோ வில் 1 ,2 புதுச்சேரி பேருந்துகள் 9 நடைமேடை யில் நிறுத்தம்.  

மதுரை 3, விழுப்புரம் 8, மார்த்தாண்டம் 1, 2, வேளாங்கண்ணி 5ஆம் நடைமேடையில் பேருந்துகள் நிறுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜன. 30 முதல் கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து ஒரு பேருந்து கூட தென் மாவட்டங்களுக்கு இயக்கப்படாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.  வேலூர், தருமபுரி, கிருஷ்ணகிரி ஓசூருக்கு செல்லும் பேருந்துகள் மட்டும் கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

கோயம்பேடு தனியார் வசமா? அமைச்சர் விளக்கம்
சென்னையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற  வளர்ச்சித் துறை அமைச்சர் எஸ். முத்து சாமி,கோயம்பேடு பேருந்து நிலையம் அமைந்துள்ள இடம் தனியார் வசம் ஒப்படைக்கப்படும் என பரப்பப்படும் தகவல்  தவறானது” என்றார்.