சென்னை, பிப். 1 - தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத்தொடர் பிப்ரவரி 12 அன்று ஆளுநர் உரையுடன் துவங்கும் என்று சட்டப்பேர வைத் தலைவர் மு. அப்பாவு அறிவித்துள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் வியாழ னன்று (பிப்.1) சட்டப்பேரவை தலைவர் அப்பாவு செய்தி யாளர்களை சந்தித்தார்.
அப்போது இத்தகவலை அவர் தெரிவித்தார். “நடப்பாண்டின் முதல் கூட்டத் தொடர் என்பதால் இந்த கூட்டத்தில் இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் படி ஆளுநர் உரையாற்று வார். அதைத்தொடர்ந்து, 2024-25 நிதியாண்டிற்கான நிதிநிலை அறிக்கையை பிப்ரவரி 19 அன்று திங்கட் கிழமை காலை 10 மணிக்கு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய் வார். பிப். 20 அன்று முன் பணம் மானியக் கோரிக்கை யும்,
21 ஆம் தேதி கூடுதல் செலவுக்கான மானியக் கோரிக்கையும் தாக்கல் செய்யப்படும்” என்றும் சபா நாயகர் அப்பாவு குறிப் பிட்டுள்ளார்.
சட்டப்பேரவை துணைத் தலைவர் கு. பிச்சாண்டி, பேர வை முதன்மைச் செயலாளர் கி. சீனிவாசன் ஆகியோர் பேட்டியின்போது உடனி ருந்தனர்.