பி.எஸ்.என்.எல். நிறுவனத்திற்கு 4ஜி சேவையை உடனே வழங்க வேண்டும், மாதாமாதம் குறிப்பிட்ட தேதியில் ஊதியம் வழங்க வேண்டும், ஒப்பந்த ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், 10 மாத ஊதிய நிலுைவையை உடனே வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் தர்ணா போராட்டம் நடைபெற்றது. இதில் பிஎஸ்என்எல்இயு மாநில துணைத் தலைவர் பாபு, மாவட்ட நிர்வாகிகள் வரதராஜன், வெங்கடேஷ், வி.எஸ்.சந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.