tamilnadu

img

‘சாதிய ஒடுக்குமுறை எதிர்ப்பு போராட்டங்கள்-களஅனுபவங்கள்’

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் பி.சம்பத் எழுதி, பாரதி புத்தகாலயம் பதிப்பித்துள்ள ‘சாதிய ஒடுக்குமுறை எதிர்ப்பு போராட்டங்கள் - கள அனுபவங்கள்’ எனும் நூல் வெளியீட்டு விழா வெள்ளியன்று (பிப்.9) சென்னையில் சிபிஎம் மாநிலக்குழு அலுவலகத்தில் நடைபெற்றது. கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிரகாஷ்காரத் நூலை வெளியிட, தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் சிறப்பு தலைவர் எஸ்.கே.மகேந்திரன் பெற்றுக் கொண்டார். அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், சிபிஎம் மத்தியக்குழு உறுப்பினர் உ.வாசுகி, நூலாசிரியர் பி.சம்பத், சிஐடியு மாநிலத் தலைவர் அ.சவுந்தரராசன், முன்னணியின் பொதுச் செயலாளர் கே.சாமுவேல்ராஜ், ஆதித்தமிழர் கட்சித் தலைவர் கு.ஜக்கையன், சிபிஎம் மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் ஜி.செல்வா ஆகியோர் பங்கேற்றனர்.