கேரள சமாஜத்தில் கேரள பாஷா நிறுவனமும், சென்னை மலையாளர்கள் கூட்டமைப்பும் இணைந்து புத்தக திருவிழாவை நடத்தி வருகின்றனர். இதில் ்‘தென்னக மொழிகளின் பயன்பாட்டுத்தேவை’ என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் சென்னை பல்கலைக்கழக பேராசிரியர்கள்.கே.அஜய்குமார், பி.எம்.கிரீஷ், ஜி.பழனி, எம்.ரங்கசாமி, விஷ்டலி சங்கர்ராவ், ஓ.கே.சந்தோஷ், தமுஎகச மாநில செயற்குழு உறுப்பினர் இரா.தெ.முத்து, மலையாளி அசோசியேசன் செயலாளர் பி.நந்தகுமார் ஆகியோர் பங்கேற்று பேசினர். இந்த புத்தகத்திருவிழா ஆகஸ்ட் 4 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.