தமுஎகச திருவொற்றியூர் பகுதிக்குழு சார்பில் முனைவர் அ.பகத்சிங் எழுதிய ‘வாழும் மூதாதையர்கள் தமிழகபழங்குடி மக்கள்’ நூல் வெளியீட்டு விழா சனிக்கிழமையன்று (டிச. 14) நடைபெற்றது. ஏ.சண்முகானந்தம் தலைமை தாங்கினார். தமுஎகச கவுரவத் தலைவர் ச.தமிழ்ச்செல்வன், பேரா.பிரபா கல்விமணி, புலவர் பா.வீரமணி, இயக்குநர் கோபி நயினார் ஆகியோர் நூலை வெளியிட கோ.லோகநாதன் (குறவர்பழங்குடி முன்னேற்ற சங்கம்), இ.கங்காதுரை (வேட்டைக்காரன் முன்னேற்ற சங்கம்), ஹேமாவதி (தமுஎகச) ஆகியோர் பெற்றுக் கொண்டனர். எஸ்.கருணா, பிரேமாரேவதி, கவிஞர் வெய்யில், சு.சக்கீர், பா.ராஜஷ்கண்ணா, முனியசாமி ஆகியோர் பங்கேற்றனர். ஜெனித் கல்வி மைய மற்றும் மையம் கலைக்குழுவினரின் நடனம், பறையிசை நிகழ்ச்சி நடைபெற்றது.