tamilnadu

img

தாமரைக்கு ஓட்டு போடாத பகுதிகளுக்கு குடிநீரை நிறுத்திய பாஜக குண்டர்கள்

பாஜகவின் ஆட்சி நடைபெறும் மத்தியப்பிரதேச மாநிலத்தில் கடந்த நவம்பர் 17 அன்று ஒரே கட்டமாக  தேர்தல் நடத்தி முடிக்கப்பட் டது. டிசம்பர் மாதம் 3 அன்று  வாக்குகள் எண்ணப்பட உள்  ளன. தேர்தல் முடிவு வெளி யாவதற்குள்ளேயே பாஜக அராஜகச் செயலில் ஈடுபட ஆரம்பித்துள்ளது. அதாவது பாஜக குண்டர்கள் தாம ரைக்கு ஓட்டு போடாத பகுதி களில் குடிநீர் விநியோகத்தை  நிறுத்தி வருகின்றனர். முங்காவாலி சட்டமன்றத் தொகுதியில் உள்ள நயகெடா  கிராம பகுதியில் யாரும் தாம ரைக்கு வாக்கு அளிக்க வில்லை எனக் கூறி அப்பகுதி யைச் சேர்ந்த பாஜகவினர் கிராம நிர்வாகத்தின் உதவி யோடு குடிநீர் விநியோ கத்தை நிறுத்தியுள்ளனர்

சத்தியம் வாங்கும் பாஜக
இந்த சம்பவம் குறித்து  கிராமமக்கள் கூறுகை யில், “நாங்கள் தண்ணீர் பிடிக்  கப் போகும்போது அங்கிருக்  கும் பாஜகவினர்,”நீங்கள் பாஜகவுக்கு வாக்களித்தீர் களா?” என்று கேட்டு சத்தி யம் செய்யச் சொல்கிறார் கள். நாங்கள் ’இல்லை’ என்று சொன்னால் உடனே  மோட்டாரை ஆப் செய்து விட்டு அங்கிருந்து விரட்டி விடுகிறார்கள். இதனால் எங்களால் குடிநீரை பெற முடியவில்லை” என்று குற் றம் சாட்டியுள்ளனர். இந்த விவகாரம் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், காங்கிரஸ் கட்சியினர் போலீ சாரிடம் புகார் அளித்துள்ள னர்.