சென்னை, மார்ச் 12- கடந்த 1955ஆம் ஆண்டு இயற் றப்பட்ட குடியுரிமை திருத்தச் சட் டத்தில், நரேந்திர மோடி தலைமை யிலான ஒன்றிய பாஜக அரசு கடந்த 2019-ஆம் ஆண்டு திருத்தம் ஒன்றைக் கொண்டு வந்தது. இந்த சட்டத் திருத்தத்தின்படி, பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தானை சேர்ந்த இந்துக்கள், சீக்கியர்கள், பவுத்தர்கள், சமணர்கள், பார்சி இனத்தவர், கிறிஸ்தவர்கள் ஆகி யோருக்கு உரிய ஆவணங்கள் எது வுமில்லை என்றாலும், இந்தியா வில் குறைந்தது 6 ஆண்டுகள் வசித் தாலே அவர்களுக்கு இந்தியக் குடி யுரிமை வழங்கலாம் என்று கூறப் பட்டது. அதாவது, கடந்த 2014 டிசம்பர் 31-ஆம் தேதிக்கு முன் குடியேறியவர்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்கலாம் என்று கூறப்பட்டது.
மோடி அரசின் இந்த சட்டம் மிகத் தெளிவாக, இந்தியாவில் குடி யேறிய முஸ்லிம்கள் மற்றும் இலங் கைத் தமிழர்களை மட்டுமே குடி யுரிமை வழங்குவதிலிருந்து பாகு படுத்தி வெளியே நிறுத்தியது. அவர் களுக்கு குடியுரிமை வழங்க மறுத்தது.
இந்த சட்டத்தை அமல்படுத்தி திங்களன்று (மார்ச் 12) அறிவிக்கை வெளியிட்டுள்ளது.
இதற்கு தமிழகத்திலுள்ள அர சியல் கட்சிகள் கடும் எதிர்ப்பையும், கண்டனத்தையும் பதிவு செய்துள் ளன. குடியுரிமைத் திருத்தச் சட் டத்தை முறியடிப்பதற்கான போரா ட்டத்தை மீண்டும் தொடருவோம் என்றும் அறிவித்துள்ளனர்.