சென்னை, பிப். 5- ரமணா திரைப்படத்தில் வருவது போன்ற பெரிய மோசடியை ஒன்றிய பாஜக அரசு செய்துள்ளதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறினார்.
சென்னை வேப்பேரியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், பல வருடத்திற்கு முன்பு வெளிவந்த ரமணா திரைப்படத்தில் ஒரு காட்சி வரும். இறந்து போன ஒருவரின் உடலுக்கு சிகிச்சை அளித்தது போல், அவரது குடும்பத்தினரிடம் இருந்து டாக்டர்கள் பணத்தை பறிப்பார்கள்.
அதுபோல் இறந்து போன 88,000 பேருக்கு பாஜக அரசு காப்பீடு திட்டம் வழங்கியிருக்கிறது. ஏற்கெனவே அவங்க இறந்து போயிட்டாங்க. அவங்க அனைவருக்கும் ஒரே நம்பரில் காப்பீடு அட்டை வழங்கப்பட்டிருக்கிறது. இறந்து போனவர்களை கூட விடாமல், அவர்களை வைத்தும் பாஜக அரசு எப்படி ஊழல் செய்கிறது பாருங்க. மீண்டும் இவங்கள ஆட்சிக்கு வந்தால் நாட்டு மக்களோட நிலைமை ரொம்ப மோசமாயிடும் என்றார்.